Posts

Showing posts from 2022

ஒரு working New Year Resolution சொல்லட்டுமா? |எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் ஒரு காகிதத்தில் இந்த வருடத்தின் பெயரையும் 12 மாதத்தின் பெயரையும் எழுதிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதத்தில் என்ன சாதிக்க வேண்டும் என்பதை அந்த மாதத்திற்கு நேராக எழுதிக் கொள்ளுங்கள். எழுதும் போது நிகழ்காலத்தில் எழுதுங்கள். அதாவது ஏப்ரல் மாதத்தில் ஒரு கார் வாங்க வேண்டும் என்றால் நீங்கள் எழுத வேண்டியது என்னிடம் ஒரு பென்ஸ் கார் இருக்கிறது என்று. இந்த 12 லட்சியத்தையும் ஒருமுறை எடுத்து படியுங்கள். பிறகு மனதுக்குள் ஒரு ஜீபூம்பா மந்திரம் செய்வது போல இந்த பன்னிரண்டில் ஏதாவது ஒன்று இப்போது நடக்க வேண்டும் என்று சிந்தியுங்கள். அப்போது ஒரு லட்சியம் கண் முன்பே தோன்றும். அந்த லட்சியத்தை வேறு ஒரு காகிதத்தில் எழுதிக் கொள்ளுங்கள். அதை அடைய வழிமுறைகளை பட்டியலிடுங்கள். அதற்காக உழையுங்கள். நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு செலவுகளை பகுத்தறிய தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

நமக்கு எந்த செலவு முக்கியமானது எந்த செலவு அனாவசியமானது என பகுத்தறிய தெரிந்தால் மிக மிக நல்லதாக இருக்கும். ஒரு எடுத்துக்காட்டுக்காக ஒரு நாளில் 24 மணி நேரத்தில் நாம் எட்டு மணி நேரம் தூங்குகிறோம். தூக்கத்திற்காக ஒரு நல்ல விலை உயர்ந்த மெத்தையையும் விலை உயர்ந்த தலையணையையும் வாங்கிக் கொள்ளலாம். இதில் ஒன்றும் தவறில்லை .ஏனென்றால் நல்ல தலையணை நல்ல தூக்கத்தையும் நல்ல தூக்கம் நல்ல ஆரோக்கியத்தையும் தரும். நாம் எந்த செலவு முக்கியமானது எந்த செலவு அனாவசியமானது என தெரிந்திருக்க வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

நாம் அனைவரையும் மரியாதையுடன் நடத்துவோம்? | எண்ணம் போல் வாழ்வு

நம்மிடம் பணிவாக மரியாதையுடன் பேசும் சிலர் நம் கீழே வேலை செய்யும் அதிகாரியிடம் அகங்காரத்துடன் பேசுகிறார் என்றால் நாம் அவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு வேலை நாமும் நம் கீழே வேலை செய்யும் அதிகாரியை போன்ற வேலை செய்து கொண்டிருந்தால் நமக்கும் இதே மரியாதை தான் அவர் கொடுப்பார். அவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் நாம் நம்மை விட வயதில் மூத்தவராக இருந்தாலும் சிறியவராக இருந்தாலும், நம்மை விட பதவியில் பெரியவராக இருந்தாலும் சிறியவராக இருந்தாலும் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக மரியாதை கொடுக்க வேண்டும். ஏனென்றால் இது தான் ஒரு சிறந்த பண்பு. எண்ணம் போல் வாழ்வு. நம்மிடம் பணிவாக மரியாதையுடன் பேசும் சிலர் நம் கீழே வேலை செய்யும் அதிகாரியிடம் அகங்காரத்துடன் பேசுகிறார் என்றால் நாம் அவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு வேலை நாமும் நம் கீழே வேலை செய்யும் அதிகாரியை போன்ற வேலை செய்து கொண்டிருந்தால் நமக்கும் இதே மரியாதை தான் அவர் கொடுப்பார். அவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் நாம் நம்மை விட வயதில் மூத்தவராக இருந்தாலும் சிறியவராக இருந்தாலும், நம்மை விட பதவியில் பெரியவர

சூழ்நிலைக்கேற்ப சமயோசிதமாக சிந்திக்க வேண்டும் | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் வேலைக்காக ஒரு இன்டர்வியூக்கு செல்கிறார். அங்கே நிறைய பேர் வேலை தேடி வந்திருக்கிறார்கள் இவருடைய நேரம் வரும்போது இன்டர்வியூ நடக்கும் அறைக்குள் கதவை திறந்து உள்ளே போகும் போது அவர் சாஷ்டாங்கமாக விழுந்துவிட்டார். அவர் கையில் இருந்த file, சர்டிபிகேட் அனைத்தும் சிதறி விழுந்தது. அவருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனாலும் எழுந்து அவர் சொன்னார் finally I have fallen in the right place. அதாவது கடைசியில் நான் வர வேண்டிய இடத்துக்கு வந்து விட்டேன் என்று. அவர் இன்டர்வியூவில் பாஸ் ஆகி வேலையும் கிடைத்துவிட்டது. எந்த ஒரு சூழ்நிலையும் நமக்கு சாதகமாக அமைய வேண்டும் என்று இல்லை ஆனால் சமயோசிதமாக சிந்தித்து செயல்படுபவர்களுக்கு எப்போதும் வெற்றி தான். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் சிங்கமா? புலியா? | எண்ணம் போல் வாழ்வு

காட்டில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வரும் ஆனால் சிங்கம் சிங்கிளாக தான் வரும் என்பது ஒரு சினிமா டயலாக் ஆகும். ஆனால் அறிவியல் என்ன சொல்கிறது என்றால் சிங்கம் வேட்டையாடும் போது கூட்டமாக வரும் மற்றும் புலியானது வேட்டையாடும் போது தனியாக வரும். அப்படி இருந்தும் சிங்கத்தை காட்டின் ராஜா என கூறுகிறார்கள் என்றால் உண்மையில் சிங்கம் காட்டில் ஒர் இடத்தை ஆட்சி செய்கிறது. வேட்டையாடும் போது திட்டம் தீட்டுகிறது. ராஜ்ஜியம் செய்வதால் அது ராஜா. புலியானது தனியாக வருவதல், ராஜ்யம் செய்யாததால் அது ராஜா அல்ல. இதிலிருந்து நமக்கு புரிவது சங்கமே சக்தி. தனி மரம் காடு ஆகாது.  எண்ணம் போல் வாழ்வு.

தற்கொலை ஒரு தீர்வு கிடையாது? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு உண்மை சம்பவம் ஒரு பெண்மணி கடன் தொல்லை தாங்காமல் தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவருடைய சொந்தங்கள் அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கே ஒரு வாரம் மருத்துவர்களின் முயற்சியின் மூலம் அவர் காப்பாற்றப்பட்டார். ஆனால் இப்போது நாலு லட்ச ரூபாய் பில் வந்திருக்கிறது. கடன் தொல்லையால் தற்கொலை செய்ய நினைத்தவருக்கு மேலும் நாலு லட்சம் ரூபாய்க்கு கடன் ஏற்பட்டிருக்கிறது. நாம் தெரிந்து கொள்ள வேண்டியது தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு கிடையாது. எந்த ஒரு பிரச்சினையும் ஒரு கை பார்த்து விடலாம் என்று எண்ணுபவர்கள் இன்று அல்லது நாளை வெற்றி காண்கிறார்கள். எண்ணம் போல் வாழ்வு.

நல்லவகளைப் பார்க்கும் போது பாராட்டலாமே? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் ஒரு சத்சங் செல்கிறார். அப்போது ஒரு பெரியவர் பேசுகையில் உங்கள் வீட்டில் உங்கள் மனைவி காலை , மதியம், ராத்திரி என மூன்று வேளைகளும் பல வருடங்களாக உணவு சமைத்து கொண்டிருக்கின்றார். நீங்கள் ஏன் ஒரு பாராட்டு தெரிவிக்கக் கூடாது என்று கூறினார். அந்த நபர் வீட்டுக்கு வந்த போது அவர் மனைவி அவர் சாப்பிட பிரியாணி பரிமாறினார். அதை சாப்பிட்டு அவர் Super, Excellent என கூறினார். அதற்கு அவர் மனைவி நான் உங்களை திருமணம் செய்து 20 வருடங்கள் ஆகிறது. இத்தனை வருடங்களாக நீங்கள் ஒரு முறை கூட என்னை பாராட்டவில்லை. இன்று பிரியாணி பக்கத்து வீட்டில் இருந்து வந்திருக்கிறது. அதை சாப்பிட்டு நீங்கள் சூப்பர் எக்ஸலண்ட் என கூறுகிறார்கள். உங்களை எல்லாம் என்ன செய்யலாம் என்று கூறினார். நாம் இயற்கையாகவே நல்லதை பார்க்கும்போது பாராட்டும் பழக்கம் நமக்கு இருக்க வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

ஜோசியர் உங்கள் ஜாதகத்தை பார்த்து என்ன சொன்னார்?| எண்ணம் போல் வாழ்வு

ஒரு தாயும் அவரது எட்டாவது படிக்கும் மகனும் ஒரு ஜோசியரை பார்க்கச் சென்றார்கள். ஜோசியர் அந்த பையனின் ஜாதகத்தை பார்த்து நீ பிற்காலத்தில் கல் உடைப்பாய் என்று கூறிவிட்டார். அந்த மாணவன் வைராக்கியத்தின் பேரில் படித்து டாக்டர் ஆனால். அவன் ஒரு Nephrologist (நெஃப்ராலஜிஸ்ட், கிட்னி ஸ்பெஷலிஸ்ட்) ஆனான். பல வருடங்களுக்குப் பிறகு ஜோசியர் மூத்திரத்தில் கல் என இந்த டாக்டரிடம் சென்றார். டாக்டர் அவருக்கு சிகிச்சை அளித்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்டார்ஜ் ஆகும்போது அந்த ஜோசியரிடம் நான் எட்டாவது படிக்கும்போது உங்களை வந்து பார்த்தேன் நீங்கள் நான் பிற்காலத்தில்  கல் உடைப்பேன் என்று எண்ணை பார்த்து சொன்னீர்கள் என்று சொன்னார். அதற்கு ஜோசியர், ஜோசியம் என்பது ஒரு அறிவியல். நான் நீ கல் உடைப்பாய் என்று கூறினேன். அதற்கு அர்த்தம் நீ கட்டிடங்களில் கல் உடைப்பாய், அல்லது வைரங்களின் கல் அபாரம்,  அல்லது மூத்திரத்தில் உள்ள கல் உடைப்பாய் என்று எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம். நாம் எப்போதும் உயர்ந்த எண்ணங்களையே உருவாக்க வேண்டும். அப்போதுதான் நம் வாழ்க்கை சிறக்கும். எண்ணம் போல் வாழ்வு.

Success Formula என்னென்ன உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

வெற்றியின் ரகசியம் உங்களுக்கு தெரியுமா? 1. நம் லட்சியத்தை கண்டறிய வேண்டும். 2. நம் லட்சியத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் போது தடைகள் கண்டிப்பாக வரும். 3. தடைகளுக்கான முக்கியமான காரணங்கள் என்ன என்பதை கண்டறிய வேண்டும். 4. அந்தத் தடைகள் இருந்து மீண்டு வர வழிமுறைகளை ஆலோசித்து திட்டம் வகுத்து வைக்க வேண்டும். 5. அந்தத் திட்டத்தின் படி நடக்க வேண்டும். இந்த இரண்டு முதல் ஐந்து வரை உள்ள விஷயங்களை மீண்டும் மீண்டும் பின்பற்றுவதால் நம் முதல் விஷயமான இலட்சியத்தை போய் சேர முடியும். எண்ணம் போல் வாழ்வு.

Solution இல்லாத problem என்று ஒன்று இல்லவே இல்லை| எண்ணம் போல் வாழ்வு

நாம் ஒரு சவாலை ஒரு மாதமாக போராடியும் ஜெயிக்க முடியவில்லை என்றால் நமக்கு வேதனையாக இருக்கும். மீண்டும் அந்த சவாலை முதலில் இருந்து தொடங்க வேண்டும் என நினைக்கும் போது மனதுக்கு வலிக்கிறது. ஆனால் நாம் யோசிக்க மறப்பது என்னவென்றால் நாம் இந்த முறை பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கவில்லை. நமக்கு கொஞ்சம் அனுபவமும் உண்டாகி இருக்கிறது. இந்த முறை நாம் கண்டிப்பாக வெல்வோம், ஏனென்றால் தீர்வு இல்லாத சவால்கள் என்று ஒன்று இல்லவே இல்லைm நாம் தீர்வை நோக்கி போவதால் தீர்வு கண்டிப்பாக கிடைத்துவிடும். கவலை கொள்ள வேண்டாம். எண்ணம் போல் வாழ்வு.

தாம்பத்திய வாழ்க்கை எப்போது சிறப்பாக இருக்கும் தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் வெளிநாட்டில் வேலை செய்கிறார் இரண்டு மூன்று வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு மூன்று மாத விடுமுறைக்கு வருகிறார். அவர் வீட்டில் அவர் மனைவி முகம் கொடுத்து பேசவில்லை. மனம் வெறுத்த அந்த நபர் ஒரு வக்கீலை பார்த்து தன் கதையை எடுத்து சொல்லி தனக்கு விவாகரத்து வேண்டும் என கூறினார். அதற்கு வக்கீல் பொதுவாக எல்லோரும் எதிர்பார்க்கும் மனைவியைப் போல உங்கள் மனைவி  கிடைத்திருந்தும் நீங்கள் உங்கள் மனைவி பேசவில்லை என்று கூறி விவாகரத்து கேட்க வந்திருக்கிறீர்கள். நீங்கள் ஒன்றுக்கு நாலு முறை யோசித்து உங்கள் முடிவை கூறுங்கள் என்று வக்கீல் கூறினார். இந்த நபர் கூறுவது போல மனைவி பேசவில்லை என்றால் விவாகரத்து செய்வது என்பது தவறான முடிவாகும். அதேபோல வக்கீல் சொன்னது போல பேசாத மனைவி இருந்தால் நல்லது என்பதும் தவறாகும். தாம்பத்திய வாழ்க்கையில் கணவரும் மனைவியும் பரஸ்பரம் புரிந்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

அறிவு மற்றும் ஞானம் வித்தியாசம் என்ன? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு அறிவு மற்றும் ஞானம் இவற்றின் வித்தியாசம் தெரியுமா? தக்காளி ஒரு பழம் என்பது அறிவு. அந்த தக்காளியை fruit salad செய்யும்போது பயன்படுத்தக் கூடாது என்பது ஞானம். நம் அறிவையும் ஞானத்தையும் எப்படி வளர்த்துக் கொள்வது என்றால் நாம் தினசரி படிக்கும் பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் படிக்க படிக்க நமக்கு பகுத்தறியும் சக்தி வளர்ந்து கொண்டே இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

நம்பிக்கையே வெற்றிக்கான ஆதாரம் | எண்ணம் போல் வாழ்வு

நமக்கு தெரிந்ததை செய்வதற்கு உடலில் பலம் வேண்டும். நமக்கு தெரியாததை செய்வதற்கு மனதில் நம்பிக்கை வேண்டும். நமக்கு எப்படிப்பட்ட நம்பிக்கை வேண்டும் என்றால் ஒரு குழந்தையை அதனுடைய தந்தை தூக்கி தூக்கி போட்டு பிடிக்கும் போது அந்த குழந்தை சிரித்துக் கொண்டே இருக்கும். தன் தந்தை கீழே விடமாட்டார் என்று அலாதியான நம்பிக்கை இருக்கும். அந்த நம்பிக்கை நமக்கும் இருக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். எண்ணம் போல் வாழ்வு.

உங்களில் யார் புத்திசாலி? | எண்ணம் போல் வாழ்வு

ஒருவரின் மனைவி அவருடைய கணவரிடம் நீங்கள் முட்டாளா? நான் முட்டாளா? என்று இன்று தெரிந்தாக வேண்டும் என்று கூறினார். ஒருவேளை கணவர் நீ தான் முட்டாள் என்று கூறினால் குடும்பத்தில் ஒரு பெரிய கலகம் ஏற்படும். ஆனால் கணவர் சாதுரியமாக சொன்னார். நீ பெரிய புத்திசாலி என்பதை உலகமே அறியும். நீ தேர்ந்தெடுத்த உன் கணவரும் புத்திசாலியாக தான் இருப்பார். அப்படி இருக்கும்போது நம் இருவரில் ஒருவர் கூட முட்டாளாக இருக்க முடியாது என்று கூறினார். குடும்ப உறவுகளில் நாம் யுக்தியோடு பேச வேண்டும். அப்போதுதான் குடும்பம் நல்லிணக்கமாக செயல்படும். எண்ணம் போல் வாழ்வு.

திருமணத்தின் போது மணமகன் குதிரையில் ஏன் வருகிறார்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகனை குதிரையில் கொண்டு வருகிறார்கள். அந்த காட்சியைப் பார்த்த ஒரு நபர் தன் பக்கத்தில் உள்ளவரிடம் திருமணங்களில் மணமகனை குதிரையில் ஏன் கொண்டு வருகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அந்த நபர் கூறினார் இதுதான் மணமகனின் கடைசி வாய்ப்பு. அவருக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றால் அந்த குதிரையில் ஓட்டம் பிடித்து விடலாம் என்று கூறினார். உண்மையில் மணமகன் குதிரையில் வருவதற்கான காரணம் அவர் ஒரு ராஜாவை போன்று தன் வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தான். நாம் என்ன எண்ணங்களை கொண்டு வருகிறோமோ அது போன்று நம் வாழ்க்கை அமையும். ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு ஞானம் அடைவதற்கான மந்திரம் தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் ஒரு சத்ஸங்கிற்கு சென்று அங்கிருக்கும் குருவிடம் எனக்கு ஞானம் வேண்டும் என கேட்டார். அதற்கு குரு நீங்கள் இங்கு ஒரு உறுப்பினராக சேர்ந்து விட்டால் நாங்கள் உங்களுக்கு ஒரு மந்திரம் சொல்லிக் கொடுப்போம் அதை தினம் தோறும் சொல்லி வாருங்கள் அதன் கூடவே இரண்டு வாழைப்பழமும் தருவோம் நாளடைவில் உங்களுக்கு இந்த ஞானம் வந்துவிடும் என்று கூறினார். உடனே அந்த நபர் எந்த பழத்தை தருவீர்கள் ரஸ்தாலியா? பூவம் பழமா? என கேட்டார். குரு சொன்னார் நீங்கள் எந்த மந்திரம் என கேட்டிருந்தால் சந்தோஷமாக இருக்கும். ஆனால் நீங்கள் என்ன பழம் என கேட்டதால் உங்களுக்கு ஞானம் கிடைக்க சிறிது காலம் அதிகமாக தேவைப்படும் என கூறினார். நாம் நம் லட்சியத்தின் மேல் குறியாக இருக்க வேண்டும். லட்சியத்தை விட்டு விலகினால் நமக்கு லட்சியத்தை அடைய பல நாட்கள் தேவைப்படும். எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு ஆமை முயல் கதை தெரியும் அல்லவா? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு ஆமை முயல் உண்மை கதை தெரியுமா? ஆமைக்கும் முயலுக்கும் ஒரு உள் அரங்கில் போட்டி நடந்தது. போட்டி முடிந்த பிறகு ஒரு நிருபர் நடுவரிடம் இந்த போட்டியில் முயல் தானே ஜெயித்தது என்று கேட்டார். அதற்கு நடுவர் ஆமாம், ஆமாம் என்று கூறினார். இந்த நிருபர் தன் நண்பர்களிடம் போய் சொன்னார் இந்த போட்டியில் ஆமை ஜெயித்தது என்று. அவர்கள் அது எப்படி சாத்தியம் என கேட்டார்கள் ஒருவேளை முயல் தூங்கி இருக்கும் என்று அவர் சொன்னார். இப்படித்தான் அந்த கதை உருவானது. இன்றைய கலி காலத்தில் சரித்திர நிகழ்வுகள் இந்த கதையை போன்று திரித்து கூறப்படுகிறது. நாம் தான் தெளிவாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் நம் காதில் பூ சுற்றி விடுவார்கள். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் Social Mediaவில் post போடுபவரா? | எண்ணம் போல் வாழ்வு

நாம் நல்ல மனநிலையில் இருக்கும்போது ஒரு சோகப் பாடலை கேட்டாலும் அதன் வரிகளை படித்துப் பார்த்து சந்தோஷப்படுவோம். ஆனால் நாமே துக்கமாக இருக்கும்போது ஒரு சோக பாடலைக் கேட்டால் நாம் துவண்டு போய் விடுவோம். அந்த பாடலை நம் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்தால் அதை பார்த்து பத்து அல்லது 50 பேர் சோகமாக இருந்து மேலும் சோகமானால் அந்த பாவம் நம்மை வந்து சேரும்.  அதனால் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைக்கும் முன் அது அடுத்தவருக்கு சுகம் தருமா? துக்கம் தருமா? என தெரிந்து, புரிந்து வைக்கவும் அல்லது நமக்கு பாவம் வரும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.  எண்ணம் போல் வாழ்வு.

எண் 9 மற்றும் நட்பின் இலக்கணம் | எண்ணம் போல் வாழ்வு

நம் நட்பானது எண் ஒன்பதை போன்று இருக்க வேண்டும். ஒன்பது கூட ஒன்பதை கூட்டும்போது 18 வருகிறது அதை ஒன்று பிளஸ் எட்டு என்று கூட்டும்போது மீண்டும் 9 வருகிறது. மேலும் ஒரு ஒன்பதை கூட்டினால் 18, 27 ஆகிறது 2 பிளஸ் 7 மீண்டும் 9 ஆகிறது. அதே போன்று நட்பில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நட்பு நிலையாக இருக்க வேண்டும். நட்பில் நாம் நண்பர்களுக்கு உதவும் போது உதவி நடக்க வேண்டும் நாம் மறைந்து இருக்க வேண்டும் அதாவது ஒன்பதில் கூட ஐந்து கூட்டினால் 14 வரும் ஒன்று பிளஸ் நான்கு ஐந்து. ஐந்தை வெளிக்காட்டி 9 மறைந்து விட்டது. மேலும் ஒரு உதாரணம் ஒன்பது கூட மூன்றை கூட்டினால் 12 வரும் ஒன்று பிளஸ் இரண்டை கூட்டினால் மூன்று வரும் மூன்று வெளிக்காட்டி 9 மறைந்திருக்கிறது அதேபோன்று நட்பில் நாம் நண்பர்களுக்கு உதவலாம் நாம் உதவி இருக்கிறோம் என்று எல்லாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எண்ணம் போல் வாழ்க.

Wife - in - law | எண்ணம் போல் வாழ்வு

மனைவியின் தந்தையை Father-in-law என்றும்  மனைவியின் தாயை mother-in-law என்றும்  மனைவியின் சகோதரரை brother-in-law என்றும்  மனைவியின் சகோதரியை Sister-in-law என்றும் ஆனால் மனைவியை wife-in-law என்று யாரும் அழைப்பதில்லை. ஏன் என்றால் wife தான் law. அதாவது சட்டம்.  மனைவியின் சட்ட திட்டங்களுக்கு ஒத்துப் போகும் கணவரின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எப்போது மனைவியின் சட்டம் மீறப்படுகிறது அப்போது தான் இந்தியன் பீனல் கோடு விவாகரத்து கோரப்படுகிறது. குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்க மனைவியின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டால் எதிர்காலம் நன்றாக இருக்கும்.  எண்ணம் போல் வாழ்வு.

கண்ணால் பார்ப்பதை நம்புபவரா நீங்கள்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் தன் நண்பரிடம் உனக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருடம் ஆகியது என்று கேட்டார். அதற்கு நண்பர் 20 வருடம் ஆகிவிட்டது என்று கூறினார். ஏன் கேட்கிறாய்? என்று கேட்டார். தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பாக நீயும் உன் மனைவியும் ஒரு Mallளில் கைகோர்த்து நடப்பதை பார்த்தேன். இன்றும் நீ ரொமான்டிக்காக நடந்து கொள்வது பார்த்தேன் என்று கூறினார். உடனே நண்பர் அது ரொமான்டிக் ஒன்றும் அல்ல. அவள் கையை நான் விட்டு விட்டால் அவள் உடனே ஏதாவது கடைக்கு புகுந்து ஏதாவது ஒரு பொருளை வாங்கி விடுவாள். அது ஒரு தற்காப்பு என்று கூறினார். நாம் கண்களால் பார்ப்பது வைத்து உடனே ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது. தீர விசாரிக்க வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

ஒரு சம்பவம் உண்மையா கதையா என்பதை உங்களுக்கு பகுத்தறிய தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

நண்பர்கள் சிலர் காட்டு வழியே ஒரு யாத்திரை போனார்கள். அவர்கள் கார் முன்பே ஒரு யானை வந்து நின்றது. நண்பர்கள் பயந்து போனார்கள். ஒவ்வொருவரும் அவர்களுக்கு தெரிந்த வழியில் அந்த யானையை விரட்ட முயற்சி செய்தார்கள். அந்த கார் ஓட்டிய நபர் காரை விட்டு இறங்கி யானைக்கு அருகில் சென்று 2000 ரூபாய் தாளை அப்படி இப்படி காண்பித்தார். இதை பார்த்ததும் அந்த யானை அங்கிருந்து நகன்று விட்டது. நண்பர்கள் ஆச்சரியத்துடன் கேட்டனர் இது என்ன வித்தை என்று. உடனே அந்த நபர் சொன்னார் நான் சில்லறை காரன் கிடையாது என்பதை யானை உணர்ந்து விட்டதால் அது அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டது என்று கூறினார்.  ஒரு சம்பவம் நடந்தால் அது உண்மையா? கதையா? என்பதை பகுத்தறியும் திறமை நமக்கு இருக்க வேண்டும். பகுத்தறியும் திறமை இல்லாத போது இந்த கலி காலத்தில் வாழ்வது மிக கடினமாக ஆகிவிடும்.  எண்ணம் போல் வாழ்வு.

மனைவியின் அருமை பெருமை உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

நம் உறவுகளில் மிகவும் சிறப்பான உறவு நம் மனைவி தான். நாம் அசலில் திருமணம் செய்து கொண்டால் ஒரு ரத்த பந்தம் இல்லாத ஒரு நெருக்கமான பந்தம் மனைவிதான். நம் தந்தை, தாய், சகோதர, சகோதரிகள், சித்தப்பா, பெரியப்பா, மாமா அவர்கள் பிள்ளைகள் எல்லாரும் நம்முடைய ரத்த பந்தங்கள்.  மனைவியின் மூலம் நாம் பெரும் குழந்தைகள் நம் ரத்த பந்தங்கள். இந்த மனைவியின் மூலம் அவருடைய இரத்த பந்தங்கள் நம்முடைய சொந்தங்கள் ஆகிறார்கள். அப்படிப்பட்ட மனைவியின் அருமை பெருமை தெரிந்து கொண்டு குடும்பம் நடத்துபவர்களின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

எண்ணங்களின் சக்தி | எண்ணம் போல் வாழ்வு

நாம் நம் நண்பர்களின் மேல் அல்லது உறவினர்களின் மேல் அவருக்குத் தெரியாமல் குளிர்ந்த தண்ணீரை எடுத்து ஊற்றினால் அவர்கள் குளிரை அனுபவம் செய்வதற்கு பதிலாக கோபத்தினால் சூடு ஆவார்கள். நம் உடலில் உள்ள தோல் குளிரையும், சூடையும் அனுபவம் செய்கிறது. நம் மனம் தான் நம் சந்தோஷத்தையும், துக்கத்தையும் அனுபவம் செய்கிறது. நாம் சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் நாம் நம் எண்ணத்தில் சுகமான எண்ணங்களை உருவாக்க வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

தாலியின் மகத்துவம் | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் தன் நண்பரிடம் கேட்டார் தாலி என்ற வார்த்தை சொன்னவுடன் உனக்கு என்ன நினைவுக்கு வருகிறது என்று. அதற்கு அவர் தாலியை அறுத்து ஓடுபவன் மூன்று வருடம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும். பொறுப்பாக தாலி கட்டியவன் வாழ்நாள் முழுவதும் ஜெயில் வாழ்க்கை வாழ வேண்டும் என்று. யார் திருமணத்தை ஜெயில் என நினைக்கிறார்களோ அவர்கள் வாழ்க்கை நரகம். யார் ஒருவர் திருமணத்தை ஒரு பல்கலைக்கழகம் என நினைக்கிறாரோ அவருடைய வாழ்க்கை சொர்க்கம். அவர் அவருடைய நினைப்பு தான் அவர்கள் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. அதனால் தான் சொல்கிறோம் எண்ணம் போல் வாழ்வு.

வெற்றிக்காக புதிய புதிய வழிகளை தேர்ந்தெடுங்கள் | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நிறுவனம் சோப் விற்றார்கள் அதற்கு கூடவே இலவசமாக பேக்கிங் பவுடர் தந்தார்கள். அந்த பேக்கிங் பவுடர் மக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றவுடன் அந்த கம்பெனி நிறைய பேக்கிங் பவுடரை விற்க தொடங்கினார்கள் அதன் கூடவே ஒரு Bubblegum  இலவசமாக கொடுத்தார்கள். அந்த bubblegum மிகுந்த வரவேற்பு பெற்றது. அந்த கம்பெனிதான் Wrigley. அந்த நிறுவனம் தான் உலகத்தில் அதிகமாக bubblegum விற்கிறார்கள். நாம் நம் வாழ்வில் ஏதோ வேலை அல்லது வியாபாரம் செய்கிறோம். அது நாம் நினைத்துப்போல் சிறப்பாக செயல்படவில்லை என்றால் புதிய வழிகளை யோசிப்பது மிக மிக நல்லது. நாம் சும்மா இருக்க கூடாது. புதிய புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

வெற்றி கிட்டும் வரை உழையுங்கள் | எண்ணம் போல் வாழ்வு

அலிபாபாவும் நிறுவனர் திரு ஜாக்பாட் அவர்கள் கூறுகிறார். today is difficult அதாவது இன்று கடினமாக இருக்கும். tomorrow will be much more difficult அதாவது நாளை இதை விட கடினமாக இருக்கும். but day after tomorrow will be beautiful ஆனால் நாளைய மற்ற தினம் நம் வாழ்வு இனிமையாக இருக்கும் but people die before tomorrow evening அதற்கு முன்னால் மக்கள் நாளை மாலை மரித்துப் போவார்கள். அவர் இப்படி சொன்னதற்கான காரணம் மக்கள் தன் லட்சியத்திற்காக உழைத்து, உழைத்து 90-95 சதவீதம் வெற்றியை பார்த்து விடுகிறார்கள்.0அங்கு துவண்டு போய் லட்சியத்தில் இருந்து விலகி விடுகிறார்கள். அப்படி செய்யாமல் வெற்றி காணும் வரை உழைக்க வேண்டும். அப்போது வாழ்க்கை சிறக்கும். எண்ணம் போல் வாழ்வு.

இக்கரைக்கு அக்கறை பச்சை? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் பல காலமாக bachelor ராக இருந்து வெறுத்து திருமணம் செய்து கொண்டார். கல்யாணத்திற்கு பிறகு மீண்டும் பேச்சிலராக வாழ நினைத்ததால் வாரத்திற்கு இரு நாள் தன் மனைவியை அவர்கள் அம்மா வீட்டுக்கு அனுப்பி விடுகிறார். வாழ்க்கை என்பது இக்கரைக்கு அக்கரை பச்சை. நம் வாழ்வு சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் நமக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது. நாம் கிடைத்ததற்கெல்லாம் நன்றி தெரிவித்து, விரும்புவன எல்லாம் மிக விரைவில் வரும் என்று நினைத்து வாழ்ந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

Mind your own business | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் தன் நண்பரிடம் நீ ஒரு பெரிய பிசினஸ் மேக்னெட் எப்படி ஆனாய் என்பதை சொன்னால் எல்லாருக்கும் உபயோகமாக இருக்கும் என்று கூறினார் அதற்கு நண்பர் நான் கல்லூரி படிக்கும்போது ஒரு பெண் நாலு வார்த்தை கூறினார் அதை பின்பற்றியதால் தான் நான் இன்று ஒரு தலை சிறந்த பிஸ்னஸ் மேக்னட்டாக இருக்கிறேன் என்று கூறினார் உடனே நண்பர் அது என்ன நான்கு வார்த்தைகள் என்று கேட்டார் mind your own business என்று அவள் கூறியதாக கூறினார். நாம் நம்முடைய காரியத்தை கவனித்துக் கொண்டு அடுத்தவர் தொழிலில் மூக்கு நுழைக்காமல் இருந்தால் நம் வாழ்வும் சிறப்பாக அமைந்து விடும்.  எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு முழு மாத சம்பளம் கிடைத்ததா? | எண்ணம் போல் வாழ்வு

ஒருவர் மனைவி தன் கணவரிடம் உங்கள் மாத சம்பள கவரில் பாதி மாதம் சம்பளம் தான் இருக்கிறது. அது ஏன்? என கேட்டார். அதற்கு கணவர் நானும் என் Bossடம் கேட்டேன். அவர் சொன்னார் போன மாதம் நீங்கள் work from home செய்தீர்கள். அப்போது வேலை நேரத்தில் நீங்கள் துணி துவைத்தது, பாத்திரம் கழுவியது போன்றவற்றுக்கு நாங்கள் சம்பளம் தர முடியாது. அதை உங்கள் மனைவியிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார். வாழ்வில் இதுபோல சுவாரஸ்யமான திருப்பங்கள் நடக்கத்தான் செய்யும். நாம் அதற்கு வருந்துவது ஒரு தீர்வு ஆகாது. அதை எப்படி சமயோசிதமாக செயல்படுவது என்று சிந்தித்தால் நம் வாழ்க்கை இனிக்கும். எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு வாழ்க்கையின் அர்த்தம் தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஒருவர் தன் வீட்டை விட்டு வெளியே போகும் போது அவரது மனைவி கேட்டார் நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று. அதற்கு அவர் நான் ஏன் பிறந்தேன்? ஏன் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்? உன்னை ஏன் திருமணம் செய்தேன்? இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்ன? என்பதை அறிந்து விட்டு வருகிறேன் என்று கூறினார். உடனே அவர் மனைவி நீங்கள் சாராயம் குடிக்க போகிறீர்கள் என்று நேரடியாக சொல்லி இருக்கலாம் என்று கூறினார். சாராயம் குடிப்பதால் அவர் கேட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்குமா? என நமக்கு தெரியாது. ஆனால் தியானத்தின் மூலம் நாம் நிச்சயம் இந்த கேள்விக்கு விடை காணலாம். நான் கடந்த 12 வருடமாக இராஜ யோக தியானம் பயிற்சி செய்கிறேன். உங்களுக்கு இராஜ யோக தியானம் பயிற்சி செய்ய வேண்டுமானால் பிரேமானந்தன் நாராயணன் YouTube சேனல் பாருங்கள். https://youtube.com/c/PremanandhanNarayanan எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள முடிகிறதா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் தன் நண்பரிடம் என் மனைவி என்னை வாழவே விடுவதில்லை என வருத்தப்பட்டு கூறினார். அதற்கு நண்பர் உன் மனைவி உன்னை கொலை செய்ய முயற்சி செய்கிறாரா என்று கேட்டார். அதற்கு அவர் அப்படி ஒன்றும் இல்லை அவள் என் ஆயுசுக்கு வேண்டி செவ்வாய்க்கிழமை தோறும் மாங்கள்ய விரதம் இருக்கிறாள். அப்போது நண்பர் நீ என்னதான் சொல்ல வருகிறாய் என கேட்டார். என் மனைவி என்னை வாழவும் விடுவதில்லை சாகவும் விடுவதில்லை. மொத்தத்தில் அவளை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று கூறினார். நாம் உறவுகளில் யாரையும் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டாம். அவர்களை அவர்களாகவே ஏற்றுக் கொள்வோம். அன்பை பரிமாறுவோம். அப்போது பாருங்கள் உங்கள் வாழ்க்கை எப்படி மிளிர்கிறது என்று. எண்ணம் போல் வாழ்வு

கடினமான சூழ்நிலைகள் நமக்கு ஏன் ஏற்படுகிறது?| எண்ணம் போல் வாழ்வு

நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திக்கும் போது இறைவனிடம் நாம் சந்திக்கும் கடினமான சூழ்நிலைகளில் இருந்து ஒரு மாற்றத்தை தர கேட்கிறோம். நாம் உண்மையில் ஆராய்ந்து பார்த்தால் எந்த ஒரு கடின சூழ்நிலையும் நம்மை மாற்றுவதற்காக வருகிறது என்பதை புரிந்து கொள்வோம். அதனால் வாழ்வில் நடக்கும் நல்ல, துக்க சம்பவங்கள் எல்லாமே நல்லதுக்கு தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நல்ல நல்ல விஷயங்கள் நமக்கு சந்தோஷத்தை தருகிறது. கடினமான சூழ்நிலைகள் நமக்கு அனுபவங்களை கொடுக்கிறது. எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

ஒருவர் எவ்வளவு தான் பட்டம் பெற்றிருந்தாலும் ஏன் டாக்டர் பட்டம் பெற்றிருந்தாலும் அவர் மனைவி உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறினால் உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. கணவன் மனைவி என்ற உலகத்தில் மனைவியின் பார்வையில் உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்றால் உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று அர்த்தம். அதே போல நம் சொந்தம், பந்தம், நண்பர்கள் மற்றும் சமுதாயம் நமக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கலாம். நாம் தான் நம் திறமைகள் மீது அதிகமான நம்பிக்கை உடையவர்களாக இருக்க வேண்டும். நாம் நம் லட்சியத்திற்காக உழைத்து அதை வெற்றி அடையும் போது நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மை புரிந்து கொள்வார்கள். அதுவரை நம் திறமைகளை பற்றி நாம் தான் அதீத நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.  எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் நண்பர்களுக்கு உங்களை பிடிக்குமா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் தன் நண்பர்களிடம் வர வர நண்பர்களுக்கு என்னை பிடிக்கவில்லை என நினைக்கிறேன் என்று கூறினார். உடனே ஒரு நண்பர் முதலில் உன்னை பிடிக்கிறதா? பிடிக்கவில்லையா? என்பது வேறு விஷயம். இப்போது உன்னை யார் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டார். இந்த காலத்தில் எல்லோரும் பிஸியாக இருக்கிறார்கள். யாருக்கும் யாரையும் நினைத்து பார்க்க கூட நேரமில்லை. அதனால் நாம் நம்மை நேசிப்பவராக இருப்போம். நாம் செய்யும் வேலையை நேசிப்பவர்களாக இருப்போம். நாம் திறம்பட வேலை செய்து நம் செயல் அடுத்தவர்களுக்கு பிடித்ததாக ஆகட்டும். அதனால் அவர்கள் நம்மை நினைக்கட்டும். எண்ணம் போல் வாழ்வு.

காதல்.... கத்திரிக்காய்... | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பையன் அவன் நண்பர்களிடம் காதல் கத்திரிக்காய் என்பதெல்லாம் வெறும் டைம் வேஸ்ட். ஒவ்வொருவரும் தன் லட்சியத்திற்காக உழைக்க வேண்டும் என்று கூறினான். உடனே அவன் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து கேட்டார்கள் உன்னுடைய காதல் தோல்வியில் முடிந்து விட்டதா? என்று. ஆணோ பெண்ணோ படிக்கும் வயதில் படிக்க வேண்டும். வேலைக்கு போகும் வயதில் வேலைக்கு போக வேண்டும். வாழ்வில் ஒரு நிலை வந்து விட்டோம் என நினைக்கும் போது அப்போது யார் மீதாவது விருப்பம் வந்தால் அப்போது விருப்பம் தெரிவித்தால் அந்த காதல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நம் வாழ்வை நாம் தான் சீராக வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் சமைத்தது கேசரியா? உப்புமாவா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் தன் மனைவியிடம் நேற்று நீ சமைத்த ரவை கேசரியில் சர்க்கரை அதிகமாக இருந்தது என்றார். அதற்கு அவர் மனைவி நீங்கள் நேற்று சாப்பிட்டது ரவை உப்புமா என கூறினார். அப்போது அந்த உப்புமாவில் அதிகமாக உப்பு இருந்தது என கூறினார். சிலர் எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். நாம் ஒரு நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் யாரையும் திருப்தி படுத்த வேண்டும் என்று வாழக்கூடாது. நாம் நம் மன நிறைவுக்கு ஏற்றபடி வாழ்க்கையை நடத்த வேண்டும்.  எண்ணம் போல் வாழ்வு.

உறவுகளில் நாம் நேர்மையாக இருப்போம் | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பையன் தன் நண்பனிடம் உனக்குத்தான் இன்ஸ்டாகிராமில் 5,6  பேரில் id இருக்கிறது அல்லவா. அந்த ஐடியில் ஒன்றிலிருந்து எனக்கு இவர் நல்லவர் வல்லவர் என்று போற்றி போஸ்ட் போட முடியுமா என கேட்டார். இது என்னுடைய கேர்ள் பிரண்டை இம்பிரஸ் பண்ண உதவியாக இருக்கும் என்று கூறினார். அதற்கு நண்பர் உனக்கு உதவாமல் வேறு யாருக்கு உதவப் போகிறேன் என சொன்னார். உன்னுடைய கேர்ள் பிரண்டு பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா என்று நம்பர் கேட்டார் அதற்கு அவர் அவள் பெயர் ரியா என குறிப்பிட்டார். உடனே நண்பர் அந்த ரியாவின் ப்ரொபைல் பிச்சர் ஒரு ரோசாப்பூவாக இருந்தால் அதுவும் என்னுடைய ஒரு fake id தான் என்று கூறினார். உறவுகளில் உறவுகளை ஈர்ப்பதற்காக நாம் இந்த மாதிரி கீழ்த்தரமான செயல்கள் செய்யக்கூடாது. உறவுகளில் நேர்மை வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் மனம் நகைப் பெட்டியா குப்பை தொட்டியா? | எண்ணம் போல் வாழ்வு

வைரத்தை வைக்கக்கூடிய பெட்டியை நாம் நகைப் பெட்டி என்று கூறுகிறோம். அதே போன்று குப்பை போடும் தொட்டியை குப்பை தொட்டி என்கிறோம்.  நம் மனதில் நல்ல நல்ல எண்ணங்களை செலுத்தினால் நாம் நல்லவர்களாக ஆவோம். கெட்ட கெட்ட சிந்தனைகளை செலுத்துவோம் ஆனால் நாம் கெட்டவர்கள் ஆவோம்.  எண்ணங்களுக்கான உணவு நாம் பார்ப்பது, கேட்பது, மற்றும் படிப்பதாகும். அதனால் நம் மனதை வைரப் பெட்டியை போல அல்லது குப்பை தொட்டியை போல வைப்பது அவரவரின் முயற்சிக்கு ஏற்ப. எண்ணப் போல் வாழ்வு.

நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்கிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் தன் நண்பர்களிடம் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள், குடியுங்கள், தொப்பை வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு ஒன்றும் கவலைப்படாதீர்கள். ஏனென்றால் நாம் இறந்தால் நம் சொந்தக்காரர்கள் நம் உடலை சுடுகாடுக்கு கொண்டு போய் அடக்கம் செய்து விடுவார்கள். நாமே நடந்து போக போவது இல்லை. நாம் வாழும் போது நம் உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இருந்தால் நல்லது. எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் இருந்தால் ரொம்ப நல்லது. வாழும் வரை  நோய் இல்லாமல் வாழ்வது எல்லாவற்றையும் விட நல்லது. எண்ணம் போல் வாழ்வு.

நாக்க முக்க... நாக்க முக்க... | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நடந்த சம்பவம் சில வருடங்களுக்கு முன்பாக தமிழ் படத்தில் வந்த ஒரு பிரபலமான பாடல் நாக்க முக்க நாக்க முக்க இந்த பாடலை முதல் முறை கேட்கும் போது அந்த பாடல் ஆசிரியரை அறைய வேண்டும் என்று எண்ணம் தோன்றியது. சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நண்பர் வழியாக ஒரு நபர் அறிமுகமானார் அவர் சொன்னார் சார் நீங்க நாக்க முக்க நாக்க முக்க பாடலை கேட்டு இருக்கிறீர்களா? அந்த பாடலை எழுதியது நான்தான். உங்களுக்கு அந்த பாடல் பிடித்திருக்கிறதா? என கேட்டார். நான் உடனே சொன்னேன் நல்ல பாடல் சார் நல்ல ஹிட் ஆன பாடல் என்று கூறினேன். மனதளவில் கூட எண்ணங்களில் கூட ஒருவரை காயப்படுத்தும் எண்ணம் தோன்றக்கூடாது அப்படி தோன்றி விட்டாலும் அது சொல்லிலும் செயலிலும் வரவே கூடாது. ஏனென்றால் எண்ணம் சொல் செயல் மூலமாக நாம் யாருக்காவது துக்கம் கொடுத்தால் நாமும் துக்கம் அனுபவிக்க வேண்டி வரும். எண்ணம் போல் வாழ்வு.

உங்களூக்கு பிறப்பு இறப்பு சுழற்சியை உடைக்க தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

நான்கு வயது மகன் தன் கர்ப்பமான தாயிடம் உங்கள் வயிற்றில் தங்கச்சி பாப்பா இருக்கிறது அல்லவா என்று கேட்டான் அதற்கு ஆம் என்று அம்மா கூறினார். தங்கச்சி பாப்பா அழகா இருப்பா இல்லமா என்று மகன் கேட்டான் அதற்கு தாயார் ஆம் என்றால். உனக்கு தங்கச்சி பாப்பா ரொம்ப பிடிக்கும் அல்லவா என்று கேட்டான் அதற்கும் தாய் ஆமாம் என்றால். அப்போ ஏன்மா தங்கச்சி பாப்பாவ சாப்பிட்டே என்று கேட்டான். இந்த மகன் இப்படி கேட்டதற்கு காரணம் அவனது அறியாமை. நாமும் இள வயதில் ஏன் பிறக்கிறோம், ஏன் வாழ்கிறோம், ஏன் சாகப் போகிறோம் என தெரியாமல் இருந்தோம். இந்த பிறப்பு இறப்பு சுழற்சியை முறியடிக்க வேண்டும் என்றால் இதற்கான விடையை நாம் இந்த பிறவியில் கண்டுபிடித்தாக வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் அகமும் புறமும் அழகாக இருக்கிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

இந்த காலத்தில் அழகே இல்லாதவர்களை கூட அழகாக காட்டக்கூடிய மொபைல் பில்டர்கள் வந்திருக்கின்றன. ஆனால் மன தளவில் அழுக்கானவர்களை அழகாக காட்டக்கூடிய எந்த ஒரு பில்டரும் கிடையாது. அதனால்தான் சொல்கிறார்கள் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று. நாம் அகமம் புறமும் அழகானவர்களாக நல்லவர்களாக வாழ்வோம். எண்ணம்போல் வாழ்வு.

பேசும் போது சொற்களை கவனியுங்கள் | எண்ணம் போல் வாழ்வு

நாம் அடுத்தவர்களிடம் பேசும் போது நீங்கள் ஒல்லியாக இருக்கிறீர்கள் நீங்கள் பென்சில் போல் இருக்கிறீர்கள் என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். அதற்கு பதிலாக நீங்கள் பார்ப்பதற்கு ஸ்லிம்மாக இருக்கிறீர்கள் என கூறுங்கள் வேண்டுமென்றால் நீங்கள் கொஞ்ச சதைப்பிடிப்போடு இருந்தால் பார்ப்பதற்கு லட்சணமாக இருக்கும் என்று சொல்லுங்கள். அதே போல பிள்ளைகளை முட்டாள் என்று திட்டாதீர்கள், வேண்டுமென்றால் நீ ஒரு அறிவு ஜீவி போல் பேசுகிறாய் என கூறுங்கள். எப்போதும் நாம் எண்ணம் சொல் செயல் மூலமாக யாரையும் காயப்படுத்தக் கூடாது ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.

திருமண வாழ்க்கை என்பது 3 ring circusஸா? | எண்ணம் போல் வாழ்வு

திருமண வாழ்க்கை என்பது த்ரீ ரிங் சர்க்கஸ் என விளையாட்டாக கூறப்படுகிறது ஏனென்றால் 1. Engagement ring - நிச்சயதார்த்த மோதிரம் 2. wedding ring - திருமண மோதிரம் 3. suffering - துக்கம் திருமண வாழ்க்கையை துக்கம் என நினைத்தால் வாழ்க்கை துக்கமாகத்தான் இருக்கும் தாம்பத்திய வாழ்க்கையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்து வாழ்ந்தாள் திருமண வாழ்க்கை ஆயிரம் காலத்து பையிறு தான். எண்ணம் போல் வாழ்வு.

நீங்க வெளிநாட்டு டூர் போகப் போறீங்களா? | எண்ணம் போல் வாழ்வு

ஒருத்தர் மனைவி அவர் கணவரிடம் நான் நேற்று மருத்துவரிடம் போகும் போது அவர் என் உடல் ஆரோக்கியத்திற்காக ஒரு மாதம் நன்றாக ஓய்வெடுக்க கூறினார். அதனால் நாம் அமெரிக்கா, யூரோப்பு, சுவிட்சர்லாந்து என சுற்றுலா போய் வரலாமா என கேட்டார். அதற்கு கணவர் நாம் வேறொரு நல்ல மருத்துவர் போய் பார்க்கலாம் என கூறினார். குடும்ப தலைவர்கள் தனக்கு கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நிர்வாகம் செய்ய வேண்டும். மனைவி, குழந்தைகள் ஆசைப்படுவதெல்லாம் வாங்கிக் கொடுத்தால் பின்னாளில் திண்டாடப்பட வேண்டியதுமா அவர்களே. கடன் இல்லாமல் வாழ்வது சிறந்த வாழ்க்கை ஆகும். எண்ணம் போல் வாழ்வு.

உறவுகளில் நிறையை மட்டும் பாருங்கள்? | எண்ணம் போல் வாழ்வு

ஒருவரின் மனைவி தன் கணவரிடம் உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என்பதை திருமணத்துக்கு முன் ஏன் கூறவில்லை என கேட்டார். அதற்கு கணவர் நீ ரத்தம் குடிக்கும் பழக்கம் இருப்பதை திருமணத்திற்கு முன் ஏன் எனக்கு கூறவில்லை என கேட்டார். திருமணத்திற்கு முன் பல விஷயங்கள் மறைக்கப்பட்டு இருக்கலாம் ஆனால் திருமணத்திற்கு பின் ஆணும் பெண்ணும் இருவரின் நிறையை மட்டும் பார்க்க வேண்டும். அப்போது திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.  எண்ணம் போல் வாழ்வு.

உங்க வாழ்க்கை ஜிங்களாலலாவா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு ரேஷன் கடையில் சக்கரை இல்லாததால் அந்த கடைக்காரர் உங்களுக்கு சக்கரை இல்லை என சொல்லும் போது நமக்கு வருத்தமாக இருக்கிறது.  நாம் நீரிழிவு நோய்க்காக டாக்டரிடம் சென்று பரிசோதிக்கும் போது டாக்டர் உங்களுக்கு சக்கரை இல்லை என்று கூறும் போது நாம் சந்தோஷமாக இருக்கிறோம். வாழ்க்கையில் இருக்கிறது என கேட்கும் போதெல்லாம் நாம் சந்தோஷப்படுவதும் இல்லை. அதேபோல வாழ்க்கையில் இல்லை என கேட்கும் போதெல்லாம் நாம் துக்கப்படுவதும் இல்லை.  நாம் வாழ்வில் நல்லதையும் கெட்டதையும் சமமாக பார்க்க கற்றுக் கொண்டால் நம் வாழ்க்கை ஜிங்களால தான்.  எண்ணப் போல் வாழ்வு.

வாழ்க்கையை பயந்து பயந்து வாழ்கிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் தன் நண்பரிடம் நம் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார். நாம் குழந்தையாக இருக்கும் போது நாம் பெற்றோர்களிடம் பயந்தோம். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களைக் கண்டு பயந்தோம். வாழ் நாள் முழுவதும் இறைவனை கண்டு பயந்தோம். முதுமையில் மரணத்தை கண்டு பயந்தோம். உடனே நண்பர் உன் மனைவியை விட்டு விட்டாயே என்றார்.  அதற்கு அவர் அவள் அடுத்த அறையில் தான் இருக்கிறாள் சத்தமாக பேசாதே என்று கூறினார். வாழ்க்கை என்பது பயந்து பயந்து வாழ்வதற்கானது அல்ல. வாழ்க்கை என்பது ரசித்து ரசித்து வாழ்வதற்கானது. எப்போதும் வாழ்க்கையை நேர்மையா பாருங்கள். அப்போது வாழ்க்கை இனிக்கும். எண்ணம் போல் வாழ்வு 

English is coming to me... | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் தினசரி இன்ஸ்டாகிராமில் தமிழில் பதிவு போடுகிறார். ஒருநாள் தனது இன்ஸ்டாகிராமில் இப்படி ஒரு வீடியோ பதிவு செய்திருந்தார் அதாவது நீங்கள் என்னுடைய அனைத்து வீடியோக்களையும் தமிழில் தான் பார்க்கிறீர்கள் அதற்கு அர்த்தம் எனக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று அர்த்தம் கிடையாது. English is coming to me. yes English is coming to me என்று வீடியோ போட்டு இருந்தார். நாம் நமது பலம் மற்றும் பலவீனத்தை தெரியாமல் இருந்தோம் என்றால் ஒருநாள் அவமானப்பட வேண்டி இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

ஆபத்து காலங்களில் நம்மை காப்பாற்றுவது யார்? | எண்ணம் போல் வாழ்வு

சில நேரங்களில் நம் வாழ்க்கை பிரச்சினைகளை நமது பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், நண்பர்கள், ஏன் இந்த சமுதாயம் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது. அந்த நேரத்திற்கு நமக்கு உதவியாக வருவது நாம் செய்த புண்ணிய காரியங்கள், தர்மங்கள். அதனால் தான் சொல்கிறார்கள் தர்மம் தலைகாக்கும் என்று. அதனால் ஒரு நாளில் நாம் இரவு படுக்கப் போகும் போது நாம் இன்று என்ன புண்ணிய காரியம் செய்தோம் என்று எண்ணி பார்க்க வேண்டும். ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.

சொர்க்க வாழ்வு இங்கேயே அமைத்துக் கொள்வது எப்படி? | எண்ணம் போல் வாழ்வு

நம்முடைய சம்பாத்தியத்தில் நாம் நிறைவாக வாழ முடியும். ஆனால் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் அவருடைய வாகனங்கள், வீடு போன்று நமக்கும் வேண்டும் என்று நினைக்கும் போது தான் நமக்கு நிம்மதி கெட்டுப்போகிறது. கடன் இல்லாத வாழ்க்கை சொர்க்கம் கடன் உள்ள வாழ்க்கை நரகம். அதனால் நிம்மதியாக வாழ கடனற்று இருங்கள். எண்ணம் போல் வாழ்வு.

காலம் பேசுமா? | எண்ணம் போல் வாழ்வு

காலம்  நம்மிடம் பேசுமா? 800 கோடி ஆத்மாக்கள் தான் செய்யும் ஒவ்வொரு கர்மத்தையும் காலம் அதன் நேரத்தில் விடையாக தரும். நாம் நல்ல நல்ல காரியங்கள் செய்தால் காலம் நமக்கு சுகத்தை தரும் நாம் கெட்ட கெட்ட காரியத்தை செய்தால் காலம் நமக்கு துக்கத்தை தரும். நாம் அனைவரும் நம் வாழ்வில் நல்லதே நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அப்படி நடக்க வேண்டும் என்றால் நல்ல காரியங்கள் மட்டுமே செய்வோம். எண்ணம் போல் வாழ்வு.

நம் மன ஆறுதலுக்கு யார் பொறுப்பு? | எண்ணம் போல் வாழ்வு

நம்மை யாராவது தெரிந்தோ தெரியாமலோ எண்ணம் சொல் செயல் மூலம் காயப்படுத்தலாம். அந்த காயத்திற்காக நாம் ஒரு நிமிடமா? அல்லது ஒரு வாழ்க்கை முழுவதுமா? வருத்தப்பட போகிறோம்? நம்மை காயப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும், அதிலிருந்து மீண்டு வர வேண்டியது நம்முடைய கடமை ஆகும். யார் என்ன சொன்னாலும் அது நம் புருவத்தின் மத்தி வரை வரலாமே அன்றி அது உள்ளே புகுந்து நம்மை தொந்தரவு செய்யக்கூடாது. இதற்கு நாம் தியானம் பயிற்சி செய்ய வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு திருமண வாழ்க்கை இனிக்கிறதா கசக்கிறதா? | எண்ணம் போல் வாழ்வு

ஒருவர் மனைவி அவர் கணவரிடம் உங்களை இப்போது தான் பார்த்தது போல் இருக்கிறது ஆனால் நமக்கு கல்யாணம் ஆகி 20 வருடங்கள் ஓடிவிட்டது என்றார். அதற்கு கணவன் உனக்கு அப்படி எனக்கு உன்கிட்ட தினசரி வகுப்பு கேட்டு கேட்டு 20 வருடங்கள் ஆகிவிட்டது போல் தோன்றுகிறது. இந்த சம்பவத்திலிருந்து ஒருவருக்கு திருமணம் இனிக்கிறது ஒருவருக்கு திருமணம் கசக்கிறது. வாழ்க்கையில் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நமக்கே தோன்றினால் தான் சந்தோஷமாக இருக்க முடியும். நம்மைப் போன்று வேறு ஒருவரை இறைவன் படைக்கவில்லை என புரிந்து கொள்ளும்போது நாம் சந்தோஷமாக இருக்க முடியும். எண்ணப் போல் வாழ்வு.

விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்ன? | எண்ணம் போல் வாழ்வு

விவாகரத்துக்கான முக்கியமான காரணம் என்ன கணவன் மனைவி இடையே மனப்பொருத்தம் இல்லாததே ஆகும். விவாகரத்து நடப்பதற்கான முக்கிய காரணம் திருமணம் தான். அதாவது ஒரு ஆணும் பெண்ணும் சிந்திக்க வேண்டியது என்னவென்றால் அவர் இருவரும் வெவ்வேறு சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவர்கள். தாம்பத்திய வாழ்க்கையில் ஒரு ஆண் சரிம்மா, சாரிமா என்று சொல்ல பழகும் போதும் அதே போல் ஒரு பெண் சரிங்க, சாரிங்க என்ன சொல்ல பழகினால் அவர்கள் திருமண வாழ்வு இனிக்கும். எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் வீட்டிக்கான ஆட்டா மாவு எங்கே வாங்குகிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பெண்மணி தன் கணவரிடம் நீங்கள் இந்த ஆட்டமாவை (கோதுமை மாவை) எங்கே வாங்கினீர்கள் எனக்கேட்டார். அதற்கு கணவர் நாம் எப்போதும் வாங்கும் அதே கடையில் தான் வாங்கினேன் என்ன அதற்கு என கேட்டார். அதற்கு மனைவி நான் சுட்ட சப்பாத்தி அனைத்தும் கருகி விட்டன என்று கூறினார். சிலர் எப்போதும் தன்னுடைய தவறை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நாம் செய்த தவறை கொள்ளும் போது தான் அடுத்த முறை அதே தவறு நடக்காமல் இருக்க சிந்திப்போம், செயல்படுவோம். எண்ணம் போல் வாழ்வு.

தாய்மார்களுக்கு அன்பான வேண்டுகோள் | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் தன் நண்பரின் வீட்டிற்கு சென்று அரை மணி நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது நண்பரிடம் உங்கள் மனைவி வீட்டில் இல்லையா என கேட்டார். அதற்கு அவர் மனைவி பெட்ரூமில் இருப்பதாகவும் சார்ஜிங் செய்து கொண்டிருப்பதாகவும் கூறினார். உடனே இவர் மொபைல் சார்ஜ் செய்கிறார்களா? என கேட்டார். அதற்காக இல்லை அவர்கள் அவர்களையே சார்ஜ் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவருடைய தாயிடம் ஒரு மணி நேரமாக பேசிக் கொண்டிருக்கிறார் என்று கூறினார். தாய்மார்கள் தங்கள் திருமணமான மகளிடம் தினசரி பேசலாம். ஆனால் மகளின் வாழ்க்கை பிரச்சனைகளை மகளே சமாளிக்க விட்டுவிட வேண்டும். அதை சமாளிக்க அறிவுரை கோறினால் அப்போது கூறலாம். எண்ணம் போல் வாழ்வு.

உங்க business என்ன? | எண்ணம் போல் வாழ்வு

இருவர் நண்பர்கள் இருவரும் பெரிதாக ஒன்றும் படிக்கவில்லை அதில் ஒரு நபரின் மகன் இளநிலை படிப்பு முடித்துள்ளார் அதனால் அவர் அவர் நண்பரிடம் என் மகன் இதற்குப் பிறகு மேலே படிக்கப் போகிறாரா அல்லது வேலைக்கு போகப் போகிறாரா என தெரிந்து கொள்ள நண்பரிடம் அவரிடம் கேட்டு சொல்ல கேட்டுக் கொண்டார் அதற்கு நண்பர் ஒரு நாள் தன் நண்பனின் மகனிடம் இதற்கு மேல் நீ என்ன செய்யப் போகிறாய் படிக்கப் போகிறாயா? வேலைக்கு போகப் போகிறாயா என்று கேட்டார். அதற்கு நண்பரின் மகன்.  that is none of your business uncle என்று கூறினான் அதற்காக நல்லது என்று விடைபெற்றார் உடனே அவர் நண்பரிடம் உனது மகன் மேலே படிக்க விருப்பப்படவில்லை அவன் வியாபாரம் பார்க்க விரும்புகிறான் என்று கூறிவிட்டார். இந்த சம்பவத்திலிருந்து நாம் இரண்டு பாடம் கற்றுக் கொள்ளலாம். 1. நாம் பெரியவர்களை தாறுமாறாக பேசக்கூடாது. 2. நாம் ஒருவர் கூறுவதை புரிந்து கொள்ளவில்லை என்றால் அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டுமே தவிர அதை விட்டுவிட்டு நாமே யூகிக்க கூடாது. எண்ணம் போல் வாழ்வு.

குழந்தைகளிடம் advice செய்யும் போது.... | எண்ணம் போல் வாழ்வு

நம் வீட்டில் குழந்தைகள் சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் போது நாம் போய் ஏன் எப்போது பார்த்தாலும் சிரித்துக் கொண்டிருக்கிறாய் என கேட்கிறோம். நீ சிரித்துக்கொண்டே இருந்தால் மிக விரைவில் அழ வேண்டி இருக்கும் என சொல்கிறோம். உண்மையில் நாமே சந்தோஷம் தேடிக் கொண்டிருக்கிறோம்.  அதேபோல குழந்தைகள் துக்கத்தில் இருக்கும் போது நாம் போய் உனக்கு நான் எப்போதும் இருக்கிறேன் கலங்காதே என கூறுகிறோம். உண்மையில் வாழ்க்கை குழந்தைகளுக்கு கசப்பான உண்மையை புரிய வைத்துக் கொண்டிருக்கிறது.  அதாவது குழந்தைகள் சந்தோஷமாக இருக்கும்போது நாமும் அவர்களுடன் சேர்ந்து குதூகலமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். அதே போன்று குழந்தைகள் துக்கத்தில் இருக்கும் போது நாம் ஆறுதல் கூறுவதன் கூட குழந்தைகளிடம் வாழ்க்கை போதிக்கும் பாடத்தை குழந்தை புரிந்து கொண்டதா என தெரிந்து கொள்ள வேண்டும்.  எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் உங்கள் அவகுணத்தை வெற்றி கொள்ள முயற்சிக்கிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் தன் நண்பரிடம் சென்று தான் நல்லவனாக ஆகப் போவதாகவும் அதனால் தன்னிடம் ஏதாவது அவகுணம் இருந்தால் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் நண்பர் நீ உடனே உன் வீட்டுக்கு சென்று உன் மனைவியிடம் அவருடைய ஒரே ஒரு குறையை எடுத்து சொல் அவள் உன் மொத்த அவகுணத்தையும் பட்டியலிட்டு சொல்லிவிடுவாள். அது மட்டுமல்ல உன் சொந்தம் பந்தம் அனைவரின் அவகுணங்களையும் கூறி விடுவார். நாம் நம் அவகுணங்களை கண்டுபிடிக்க நம் நண்பரையோ, மனைவியோ கேட்க வேண்டியது இல்லை.  நாமே எண்ணம், சொல், செயல் மூலமாக யாருக்காவது துக்கம் கொடுத்திருக்கிறோம் என என யோசித்தால், துக்கம் கொடுத்திருந்தால், அதை மாற்றிக் கொண்டால் நாம் ஒரு சிறந்த ஆத்மாவாக ஆகிவிடுவோம். எண்ணம் போல் வாழ்வு.

உங்களை யார் நம்புவார்கள்? | எண்ணம் போல் வாழ்வு

உலகத்தில் ஒரு நபர் அடுத்த நபரை நம்பாமல் இருப்பதற்கு இரு காரணங்கள். 1. அந்த நபரை பற்றி முழுமையாக தெரியாமல் இருப்பது. 2. அந்த நபரை பற்றி முழுமையாக தெரிந்து இருப்பது. நம்மை முழுமையாக தெரியாதவர்கள் நம்பவில்லை என்றால் வருதப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நம்மை தெரிந்தவர்கள் நம்மை முழுமையாக நம்பவில்லை என்றால் அதற்கு இரண்டு காரணங்கள். 1. அவர்கள் சொல்வது போல் நம்மை முழுமையாக அவருக்கு தெரியாது. 2. நம்மில் ஒரு அவகுணம் கண்டிப்பாக இருக்கிறது. அதை நாம் மாற்றியே தீர வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்குள் பரஸ்பர புரிதல் இருக்கிறதா? | எண்ணம் போல் வாழ்வு

பரவலாக இப்படி சொல்கிறார்கள் அதாவது பொறுப்பே இல்லாத ஒரு ஆண் அல்லது பொறுப்பே இல்லாத ஒரு பெண் அவர் அவர்களுக்கு திருமணம் நடக்கும்போது அவர்கள் வாழ்க்கை மெச்சப்படும் என்று. இதே சமுதாயம் ஒருவர் வாழ்க்கை சீரழிந்து போனதற்கு திருமணமே காரணம் என்றும் சொல்கிறது. அது எப்படி திருமணம் நல்லதாகவும் அதே சமயம் கெட்டதாகவும் ஆக முடியும். திருமண வாழ்க்கையில் பரஸ்பர புரிதல் வாழ்க்கையை சொர்கமாக்கும் எப்போது இந்த புரிதில் இல்லையோ அப்போது வாழ்க்கை நரகமாகும். இவ்வளவுதான் விஷயம். எண்ணம் போல் வாழ்வு.

இறைவனிடம் பேசும் மொழி என்ன? | எண்ணம் போல் வாழ்வு

எனக்கு தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் பேச தெரியும். மற்ற பாஷை பேசுபவர்களிடம் பேச முடியாது. நாம் இறைவனிடம் எந்த பாஷையில் பேசுவோம். நாம் எல்லோரும் ஒரு ஆத்மா அவர் அவருக்கு கிடைத்த உடலில் நடித்துக் கொண்டிருக்கிறோம். ஆத்மாவிற்குள் மனம் புத்தி சன்ஸ்கார் இருக்கிறது. இறைவனும் ஆத்மா. அதாவது உயர்ந்ததிலும் உயர்ந்தவர். அவருக்குள்ளும் மனம் புத்தி சன்ஸ்கார் இருக்கிறது. மனம் பேசும் பாஷை எண்ணங்கள். நாம் இறைவனிடம் எண்ணத்தின் மூலமே பேச முடியும். இதற்காக மௌனம், தியானம் கற்றுக் கொண்டால் இறைவனிடம் சிறப்பாக பேசலாம். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் எல்லா விரலிலும் மோதிரம் போடுபவரா? | எண்ணம் போல் வாழ்வு

ஒருத்தர் தன் 10 விரலிலும் மோதிரம் அணிந்து இருந்தார். அதை பார்த்த ஒருவர் உங்களுக்கு மோதிரம் அணிவது மிகவும் பிடிக்குமா என கேட்டார். அதற்கு அவர் என்னுடைய முதல் மோதிரம் திருமணத்திற்காக இடப்பட்டது. அதற்குப் பிறகு குடும்பத்தில் சமாதானம் வேண்டுமே என்பதற்காக கலர் கலராக மோதிரம் அணிய தொடங்கி விட்டேன் என்றார். தாம்பத்திய வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே பரஸ்பர அன்பு புரிதல் இருந்தால் மட்டுமே உறவுகள் நீடிக்கும் விரல்களில் மோதிரம் அணிவதால் அல்ல. எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் செய்யும் செயல்களுக்கு சர்டிபிகேட் எதிர்பார்க்கிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

ஒருவருடைய மனைவி தன் கணவரிடம் சில வருடங்களுக்கு முன்னால் எனக்கு உடல்நிலை சரியில்லாத போது நீங்கள் என்னை மருத்துவமனையில் நன்றாக பார்த்துக் கொண்டீர்கள். அதே போல கொரோனா காலத்தில் எனக்கு கொரோனா வந்த போது அப்போதும் என்னை நன்றாக பார்த்துக் கொண்டீர்கள். இப்போது சமீபத்தில் ஒரு விபத்தில் என் கால் முறிவு ஏற்பட்டபோது அப்போதும் என்னை நன்றாக பார்த்துக் கொண்டீர்கள். இதிலிருந்து உங்களுக்கு என்ன புரிகிறது. நமக்கு கல்யாணம் ஆகி பத்து வருடங்கள் ஆகிறது, எனக்கு எப்போதுமே உடலில் ஏதாவது ஒரு உபாதை இருக்கிறது. நீங்கள் என் வாழ்க்கையில் வந்த ஏழரை என்று கூறினார். நாம் எப்போதுமே நல்ல செயல்களே செய்வோம். ஆனால் யாரிடமும் அதற்கான நற்சான்றிதழ்  கிடைக்க வேண்டும் என்று இருக்க வேண்டாம். எண்ணம் போல் வாழ்வு.

நீங்க ஒரு meaning full life வாழ்றீங்களா? | எண்ணம் போல் வாழ்வு

நமக்கு மனசு சரியில்லாத போது நாம் வேறு சிலரிடம் போன் செய்து நமது மனதை ஆற்றிக் கொள்வோம். அதே போல நமது நண்பர்கள், உறவினர்கள் அவர்களுக்கு மனது சரியில்லாத போது அவர்கள் வேறு யாருக்காவது போன் செய்து அவர்கள் மனதை ஆற்றிக் கொள்வார்கள். நம் சொந்தம், பந்தம் அவர்கள் மனசு சரியில்லாத போது அவர்கள் பேச நினைக்கும் ஆத்மா நாமாக இருந்தால் மிக சிறப்பு. அப்போது தான் நாம் ஒரு சிறந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பொருள். எண்ணம் போல் வாழ்வு.

எங்கே நிம்மதி? | எண்ணம் போல் வாழ்வு

எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்ன மக்கள் பாடுகிறார்கள். சிலர் நிம்மதிக்காக பணத்தை இழக்கிறார்கள். மேலும் சிலர் பணத்திற்காக நிம்மதியை இழக்கிறார்கள். நாம் எந்த காலத்தில் நிம்மதிக்காக நம்மை தொலைக்கக் கூடாது. வாழ்வில் சுகமோ தூக்கமோ நாம் நமது சந்தோஷத்தை என்றும் இழக்கக்கூடாது. யார் இந்த நொடி சந்தோஷமாக இருக்கிறார்களோ அவர்கள் தான் அடுத்த நொடியும் சந்தோஷமாக இருக்க முடியும். இதுவே நிம்மதி அடைவதற்கான நிரந்தர ரகசியம். எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு அதிகாலை எழும் பழக்கம் இருக்கிறதா? | எண்ணம் போல் வாழ்வு

இன்றைய மாணவர்கள் பள்ளி இருக்கும்போது காலையில் ஆறு மணிக்கு எழுகிறார்கள் அதே பள்ளி விடுமுறை நாட்களில் 8 அல்லது 9 மணி வரை தூங்குகிறார்கள். வேலைக்குப் போகுபவர்கள் வேலை நாட்களில் சீக்கிரமாகவும் வேலை இல்லாத நாட்களில் நேரம் கழித்தும் எழுகிறார்கள்.  நம் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் நாம் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். அதாவது நான்கு மணிக்கே எழுந்திருக்க வேண்டும். ஏனென்றால் அதிகாலையில் எழுந்து தியானம், உடற்பயிற்சி மற்றும் படித்தல் செய்து பாருங்கள் உங்களுக்கே புரியும்.  எண்ணம் போல் வாழ்வு.

இது உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

நம் வாழ்வில் ஒவ்வொரு சம்பவமும் இரு முறை நடக்கிறது ஒன்று நமது மனத்திரையில் ஒன்று நிஜத்தில். ஒருவேளை நாம் காரில் போகும் போது நம் காரை ஏதாவது டூவீலர் வந்து இடித்து விடுவார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கினாலா அந்த சம்பவம் நடக்க வாய்ப்பு இருக்கிறது.  நாம் பத்திரமாக போய் பத்திரமாக திரும்பி வருவோம் என்ற எண்ணத்தை தான் உருவாக்க வேண்டும்.  எப்போதும் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்க கூடாது நேர்மையான எண்ணங்களை மட்டுமே உருவாக்க வேண்டும். ஏனென்றால எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் சந்திக்கும் நபரிடம் என்ன பார்ப்பீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு நபரிடம் என்ன பார்ப்பீர்கள் அவருடைய அழகையா, அவருடைய பணம் மற்றும் வசதியா? நீங்கள் பார்ப்பதனால் அவர்களுடைய vibrationனை பாருங்கள்.  அவர்கள் எவ்வளவுதான் அழகாகவும், செல்வந்தர்களாகவும் இருந்தாலும் அவர்கள் எதிர்மறை எண்ணங்கள் என்னும் வைப்ரேஷனை பரப்பினால் அது நம்முடைய ஆத்ம சக்தியை அழித்துவிடும்.  அதனால் நாம் நேர்மறை வைப்ரேஷன் உருவாக்குபவர்களிடம் உறவு வைத்துக் கொள்வோம். எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் மனைவியோட physchology உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

physchology என்பது ஒரு science அது  mind மற்றும் behaviour பற்றிய படிப்பாகும். தாம்பத்திய வாழ்க்கையில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே mind மற்றும் behaviour compatible ஆக இருக்க வேண்டும். ஒரு வேலை ஒருவர் physchoவாக இன்னொருவர் logicalகலாக சிந்திப்பவராக இருந்தால் அந்த குடும்பம் என்னவாகும் என யோசித்துப் பாருங்கள். கணவன் மனைவி இருவரும் மனம் மற்றும் நடத்தையில் பொறுத்தப்பட்டு போக வேண்டும். மனம் எண்ணங்களை உருவாக்கக்கூடிய தொழிற்சாலை ஆகும். அதனால்தான் கூறுகிறோம். எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் காதலியே இன்று உங்கள் மனைவியா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு தொலைபேசி கம்பெனியிலிருந்து ஒரு நபருக்கு போன் வந்தது அவர்கள் கேட்டார்கள் நீங்கள் கடந்த ஆறு மாதமாக இரவு முழுவதும் போனில் பேசியிருக்கிறீர்கள், ஆனால் இப்போது அப்படி நடக்கவில்லை ஏனென்று தெரிந்து கொள்ளலாமா என்று கேட்டார்கள். அதற்கு அவர் நான் என் காதலியுடன் இரவு முழுவதும் பேசிக் கொண்டிருந்தேன். இப்போது அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்றார். இப்போது அவள் என் மனைவி என்று கூறினார். காதலிக்கும் போது ஃபோனில் பேசுவது சகஞம். திருமணம் ஆகிவிட்டால் அவர் அருகில்  இருப்பதால் போனில் பேச வேண்டிய அவசியம் இல்லை. இதில் கூடுதலாக சிந்திக்க ஒன்றும் இல்லை. எண்ணம் போல் வாழ்வு.

Crush புது definition தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

crush ன்னா friend க்கு மேல lover க்கு கீழ் அப்படின்னு விளக்கம் கொடுக்கறாங்க. ஆனா உண்மையான விளக்கம் crush ன்னா friend க்கு மேல lover க்கு பக்கத்துல. ஏன் அப்படி சொல்றோம்னா காதல் தோல்வி வேதனை தர மாதிரி crush பிரியும்போது ஒரு வேதனை தருகிறது.  மாணவர்கள் படிக்கும் வயதில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர காதல் crush என நேரத்தை வீணடிக்க கூடாது.  எண்ணம் போல் வாழ்வு.

பெண்கள் மனதில் என்ன இருக்கிறது என கண்டுபிடிக்க முடியுமா?

ஆறும் அது ஆழமில்ல, அது சேரும் கடலும் ஆழமில்ல, ஆழம் எது ஐயா அந்த பொம்பள மனசு தான்யா. எல்லோரும் பெண்களின் மனதில் என்ன இருக்கிறது என ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்று உலகத்தில் ஒரு 800 கோடி ஆத்மாக்கள் இருக்கிறார்கள். ஆனால் இறைவன் ஒவ்வொருத்தரின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவரே பார்ப்பதில்லை. அப்படி இருக்கும்போது நாம் ஏன் நம் நேரத்தை வீணடிக்க வேண்டும். எல்லோரையும் அவர்களை அப்படியே ஏற்றுக் கொண்டால் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.  எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் ஒரு புது கார் வாங்க போறீங்களா? | எண்ணம் போல் வாழ்வு | #shorts #tamil #thoughts

நீங்க ஒரு புது கார் வாங்கப் போறீங்களா? அதுவும் EMI ல வாங்க போறீங்களா? அப்போ இந்த மூணு பாயிண்ட்ஸ நினைவில் கொள்ளுங்கள். ஒன்று - அந்த கார் வாங்குவதற்கான 20% முன் பணம் நம்மிடம் கையில் இருக்க வேண்டும். இரண்டு - கார் வாங்கும் தவணை நாலு வருடங்களுக்குள் இருக்க வேண்டும். மூன்று - கார்க்கான EMI தொகை நாம் வாங்கும் சம்பளத்தில் பத்து சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். கார் வாங்கும் போது இந்த 3 விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள், இல்லையேல் நாம் பிறகு வருத்தப்பட வேண்டி இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

ஒரு காதலியின் கல்யாண பத்திரிகை? | எண்ணம் போல் வாழ்வு

Image

உறவுகள் மேம்பட ஒரு யுக்தி | எண்ணம் போல் வாழ்வு

உறவுகள் நீண்ட நாள் நீடிக்க நம் சொல் மற்றும் செயல் மட்டுமே போதுமானது அல்ல நம் நல்ல எண்ணமே அதை உறுதி செய்கிறது. அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஒரு தாயின் அன்பு. ஒரு தாய்க்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு சரி சமமான அன்பை பகிர்வதற்கு முக்கியமாக காரணம் அவளுடைய எண்ணமான என் குழந்தைகள் என்பதே.  எப்போது எண்ணங்கள் உயர்வாக இருக்கிறதோ சொல்லும், செயலும் தானாகவே நன்றாக இருக்கும். சிறந்த உறவுகள் நீடிக்க உயர்ந்த எண்ணங்களை உருவாக்குவோம்.  எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் வெற்றிக்கு யார் காரணம்? | எண்ணம் போல் வாழ்வு

Image

ஒரு நாளில் எத்தனை மணி நேரம் தூங்குவீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பையன் அவன் நண்பர்களிடம் சொன்னான் எங்க அப்பா சொன்னாரு நம்போ யாருக்குமே துக்கம் மற்றும் கஷ்டம் யாருக்கும் கொடுக்க கூடாது. உடனே அவன் நண்பர்கள் சொன்னார்கள் நல்ல விஷயம். அதற்கு நீ என்ன செய்கிறாய் என கேட்டார்கள். அதற்கு அவன் சொன்னான் நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தூங்கி விடுவேன் என்று.  ஒரு நாளில் நாம் ஆறு முதல் 8 மணி நேரம் தூங்கலாம். ஆனால் தூங்குவதே வாழ்க்கையின் லட்சியமாக வைத்துக் கொள்ள முடியாது. நாம் நம் வாழ்க்கையில் அதிகாலையில் எழுவோம், வேலைகள் செய்வோம்  மற்றும் சாதிப்போம். எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் வெற்றிக்கு யார் காரணம்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு ஆண் மகன் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என கூறுகிறார்கள், ஆனால் உண்மையில் ஒரு ஆண் கார், வீடு, வசதி ஏற்படுத்திய பிறகு தான் அவனுக்கு சிறந்த ஒரு பெண் திருமணத்திற்கு ஏற்றுக் கொள்கிறாள். திருமணத்திற்கு வசதி, பணம் இவற்றை எவ்வளவு முக்கியமாக பார்க்கிறோமோ அதே போல ஆண், பெண் இருவரின் குணத்தையும் பார்க்க வேண்டும். ஏனென்றால் குணம் தான் வாழ்க்கையை சுரக்க்ஷிதம் ஆக்குகிறது.  எண்ணம் போல் வாழ்வு.

ஒரு காதலியின் கல்யாண பத்திரிகை? | எண்ணம் போல் வாழ்வு

ஒருத்தனுடைய காதலி அவளுடைய கல்யாணப் பத்திரிகையை அவனிடம் கொடுத்து போய்விட்டாள். இதை பார்த்த அவனுடைய நண்பன் நீங்கள் இரண்டு பேரும் திருமணம் செய்வீர்கள் என நான் நினைத்தேன், உங்கள் இருவரின் பெயரும் இந்த பத்திரிகையில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன் என்று கூறினான். அதற்கு அவன் இப்போதும் எங்கள் இரண்டு  பேரின் பெயரும் இந்த பத்திரிகையில் இருக்கிறது. அவளுடைய பெயர் பத்திரிகைக்குள்ளும் என்னுடைய பெயர் பத்திரிகையின் கவரிலும் உள்ளது என்றான். வாழ்க்கையில் எவ்வளவு பெரிய tragedy வந்தாலும் நாம் அதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருப்பதைவிட்டு விட்டு அடுத்தது என்ன செய்யலாம் என யோசித்து செயல்படும் போதே நம் வாழ்க்கை சிறப்பாக ஆகிறது. எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் சொத்து பத்திரம் யார் பெயரில் உள்ளது? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு காதலன் தன் காதலியிடம் எனக்கு உன்னை மிக மிக பிடிக்கும் அதனால் உன் பெயரை நான் பச்சை குத்திக் கொள்ளவா அல்லது என் இதயத்தில் எழுதிக் கொள்ளவா என கேட்டான். அதற்கு காதலி வேண்டும் என்றால் உங்கள் சொத்து பாத்திரத்தில் என் பெயரை எழுதிக் கொள்ளுங்கள் என்று கூறினாள். உறவுகள் அன்பின் பெயரில் உருவாக வேண்டும் பொருளின் பெயரில் அல்ல. எந்த உறவு பொருட்கள், வசதி, சொத்து பார்த்து ஏற்படுகிறதோ அது நீண்ட நாள் நிலைப்பதில்லை. எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்குள் ஊடல் ஒன்றும் இல்லையே? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு திருமணமான பெண் அவருடைய அம்மா வீட்டுக்கு சென்று தன் கணவருக்கு போன் செய்கிறார். அவரை உடனே வந்து தன்னை வீட்டுக்கு அழைத்துப் போகுமாறு கூறுகிறார். கணவர் ஆச்சரியமாக பத்து நாள் தங்குவதாக போய் விட்டு ஐந்தாவது நாளே திரும்பி வருவதாக கூறுவது ஏன் என்று கேட்டார். அதற்கு அவர் மனைவி இந்த ஐந்து நாளில் என் அப்பா, என் அம்மா, தம்பி, தங்கை என் எல்லோருடனும் சண்டை போட்டாச்சு ஆனால் உங்களுடன் சண்டை போடும் போது தான் அதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. அதனால் நான் எனது உடைகளை எடுத்து வைத்து விட்டேன். நீங்கள் வந்து என்னை அழைத்து செல்லுங்கள் என்று கூறினார். தாம்பத்திய உறவில் ஊடல்கள் இருக்கலாம். சிறு சிறு பிணக்கங்கள் இருக்கலாம். ஆனால் அதுவே பெரிய பிரச்சினையாக ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

மனசும் money purseசும் | எண்ணம் போல் வாழ்வு

நம் மனசும் நம் money purseசும் ஒரே போல தான் நம் money purseசில் நிறைய சில்லறைகள் இருக்கும்போது அது பாரமாக தெரிகிறது. அதேபோல நம் மனதில் நடந்து முடிந்த பழைய சில்லறை விஷயங்கள் மனதில் இருக்கும் போது நமக்கு பாரமாக தெரிகிறது.  நம் money purseசில் ரூபாய் நோட்டுகள் இருக்கும் போது purse லேசாக தெரிகிறது. அதே போல நம் மனதில் நல்ல நல்ல எண்ணங்கள் தோன்றும் போது நம் மனது லேசாகிறது. நம் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.  எண்ணம் போல் வாழ்வு.

நாளைய சந்தோசம் இன்றைய சந்தோஷம் எது முக்கியம்? | எண்ணம் போல் வாழ்வு

நாம் அடுத்த ஐந்து வருடத்தில் இதை அடைய வேண்டும் என்ற கனவை உருவாக்கி அதற்காக உழைக்கிறோம். அடுத்த ஐந்து வருடத்தில் நம் கனவு நினைவாகிறது. ஆனால் அன்று நாம் சந்தோஷப்படுவதற்கு பதிலாக அடுத்த ஐந்து வருடத்திற்கு என்ன செய்யலாம் என திட்டம் தீட்டி வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறோம். நாளைய சந்தோஷத்தை விட இன்றைய சந்தோஷத்திற்கு நாம் உழைப்போம். அப்போது நம் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

வாழ்க்கை என்னும் ஓடம் | எண்ணம் போல் வாழ்வு

ஒருவர் பிரார்த்தனையில் கடவுளே எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது நான் சாகலாம் என நினைக்கிறேன் என்றார். உடனே அவருக்கு ஒரு அசிரிரியின் சத்தம் கேட்டது. நல்லது இன்று மாலை உன்னை அழைத்துக் கொள்கிறேன் என்று. உடனே அந்த நபர் பயந்து போய்விட்டார் இறைவா நான் வெறும் விளையாட்டுக்காக தான் சொன்னேன். நான் இறக்க முடிவு செய்யவில்லை என்று. பொதுவாக மக்களுக்கு வாழ பிடிக்கவில்லை ஆனால் இறக்கவும் தைரியம் இல்லை. பாருங்கள் இன்று உலகில் 800 கோடி பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் நாமும் வாழ்ந்து காட்டுவோம். சவால்களை ஜெயித்து காட்டுவோம்.  எண்ணம் போல் வாழ்வு.

நாமும் தேவதை ஆகலாம் | எண்ணம் போல் வாழ்வு

நாம் மரியாதையே கொடுக்க தகுதி இல்லாதவர் என்று நினைப்பவருக்கும் நாம் மரியாதை கொடுப்போம். ஏனென்றால் நாம் மரியாதை காண்பிப்பது நமது பண்பு ஆகும். அது அடுத்தவருக்கு இருக்கிறதோ இல்லையோ. தேவதை என்பதன் பொருள் தெய்வீக குணம் உள்ள மனிதர்கள். நாம் தேவதைகளைப் போல நடந்து கொள்வோம். நம்முடைய முகம், நம்முடைய புன்னகை அடுத்தவர்களை வசிகரிக்கட்டும்.  எண்ணம் போல் வாழ்வு.

நீங்க எந்த category? | எண்ணம் போல் வாழ்வு

சிலர் அதிகாலையில் எழுந்தவுடன் நாம் அடுத்தவர்களுக்கு என்ன வேலை கொடுக்கலாம் என யோசிக்கிறார்கள்.  சிலர் அதிகாலையில் எழுந்தவுடன் நமக்கு கொடுக்கப்பட்ட வேலையை எப்படி செய்யலாம் என்று யோசிக்கிறார்கள்.  ஒரு படிப்பு சொல்கிறது உலகில் மூன்று சதவிகித மக்கள் அடுத்தவர்களுக்கு வேலை கொடுப்பதாகவும் 97 சதவீத மக்கள் தங்களுக்கு கிடைத்த வேலையை செய்வதாகவும் கூறுகிறது.  நாம் எந்த பிரிவில் இருக்க வேண்டும் என நாம் தீர்மானிப்போம். உயர்ந்த எண்ணங்கள் உயர்ந்த இடத்தில் கொண்டு செல்லும்.  ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.

சூரிய உதயம் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன? | எண்ணம் போல் வாழ்வு

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாலையும், ஒவ்வொரு சூரிய அஸ்தமனமும் நமக்கு உணர்த்துவது நாம் நம் ஆயுளில் ஒரு நாள் முடித்து விட்டோம் என்பது தான். அதேபோல ஒவ்வொரு சூரிய உதயமும் இறைவன் நமக்கு நம் மன விருப்பங்களை நிறைவேற்ற இன்னும் ஒரு நாள் கொடுத்திருக்கிறார் என்பது ஆகும். அதனால் நாம் ஒவ்வொரு விடியலையும் சிறந்த முறையில் பயன்படுத்தி நம் வாழ்க்கை சிறப்பாக வைத்துக் கொள்வோம். எண்ணம் போல் வாழ்வு.

நாம் யாரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்? | எண்ணம் போல் வாழ்வு

நாம்  பார்க்கும் ஒவ்வொருவரிடமும் இந்த மூன்று விசேஷங்களை பாருங்கள். 1 அவர்கள் புத்திசாலித்தனம் 2 அவர்கள் செயலாற்றும் திறன் 3 அவர்களின் நேர்மை. யாரிடம் நேர்மை இல்லையோ அவர்கள் புத்திசாலியாக இருந்தாலும் செயலாற்றும் திறன் உடையவராக இருந்தாலும் அவரிடம் ஜாக்கிரதையாக இருங்கள். வேண்டுமென்றால் விலகி இருங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் எப்படிப்பட்ட புத்தகம் படிப்பீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

புத்தகம் படிக்கும் பழக்கம் நல்லது. நாம் எப்படிப்பட்ட புத்தகம் படிக்க வேண்டும்? நாம் புத்தகம் படிக்கும்போது பக்கங்களை புரட்டிக் கொண்டே இருந்தால் அது சாதாரண புத்தகம். அதுவே நாம் புத்தகம் படிக்கும் போது அது நம்மை புரட்டிப் போட்டால் அதாவது நம்மை யோசிக்க செய்தால் அது சிறந்த புத்தகம். நாம் சிறந்த புத்தகத்தை படிப்போம் நம் வாழ்வை சிறப்பாக வைத்துக் கொள்வோம். எண்ணம் போல் வாழ்வு.

Simple formula for success life | எண்ணம் போல் வாழ்வு

வாழ்க்கையில் சிறப்பாக வாழ எளிமையான வழி என்ன தெரியுமா. நாம் யாரையும் தோற்கடிக்க வேண்டாம் ஆனால் எல்லோருடைய மனதையும் ஜெயிக்க வேண்டும். நாம் யாரையும் கண்டு ஏளனமாக சிரிக்க வேண்டாம் அடுத்தவர் சிரிப்புக்கு நாம் காரணமாக இருப்போம். இந்த சிறிய இரண்டு வழிகளை பின்பற்றியினால் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

காற்று உள்ள போதே தூற்றிக்கொள்| எண்ணம் போல் வாழ்வு

ஒரு பையன் ரொம்ப வருஷமா ஒரு பொண்ணு ஒரு தலையா காதலிச்சிட்டு வந்தான். அவன் நண்பர்கள் அவகிட்ட போய் உன் காதலை சொல்ல வேண்டியது தானே என்று கூறினார்கள் உடனே அவன் ஒரு தைரியத்தை வர வைத்து அடுத்த நாள் மாலைக்குள் தனது காதலை வெளிப்படுத்துவதாக கூறினான் அடுத்த நாள் மாலை நண்பர்கள் அவனை கேட்டபோது அவன் சொன்னான் நேற்று மாலையே அவள் என் மொபைல் நம்பரை பிளாக் செய்து விட்டால் என்று. நான் வாழ்க்கையில் நமக்கு வரும் வாய்ப்புகளை அப்போது அப்போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

உலகப் பார்வையும் உங்கள் பார்வையும் ஒன்றா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பொண்ணு அவ பாய் பிரண்டு கிட்ட வந்து உனக்கு ஒரு நல்ல நியூஸ் ஒரு கெட்ட நியூஸ் சொல்ல போறேன்னு சொல்ல ஆரம்பிச்சா. உனக்கு எனக்கும் செட் ஆகாது அதனால நம்ப பிரேக் அப் பண்ணிக்கலாம். அதுக்கு அந்த பாய் ஃப்ரெண்ட் ஓகே அப்போ அந்த bad நியூஸ் என்ன என்று கேட்டான். நாம் நல்லதுன்னு நினைக்கிறது உலகம் நல்லதுன்னு நினைக்கவேண்டும் என்று அவசியம் இல்லை.  நான் கெட்டதுன்னு நினைக்கிறது உலகம் கெட்டதுன்னு நினைக்கணும்னு அவசியம் இல்லை. நம்ப பார்வையும் உலக பார்வையும் ஒரே அளவுல இருக்கும் என்று எதிர்பார்ப்பதே சரி அல்ல. எண்ணம் போல் வாழ்வு.

நீங்க disturbedஅ இருக்கீங்களா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பையன் ரொம்ப disturbedஅ இருந்தான். அப்போ அவன் girl friend வந்து baby நீ ஏன்ரொம்ப disturbedஅ இருக்கன்னு கேட்டா?  அதுக்கு அவன் baby நீ இருக்கும் போது என்னை யாராவது disturb பண்ண முடியுமா?  இப்போ அவ ரொம்ப confuse ஆயிட்டா. இவன் நம்மள யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்கன்னு பாசிட்டிவா சொல்றேனா? அல்லது நான் தான் disturbnessன்னு நெகட்டிவா சொல்றேனா? வாழ்க்கையில என்ன சூழ்நிலை வந்தாலும் நாம் அதை பாசிட்டிவா தான் பார்க்கணும். அப்போது தான் நம்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.  எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு Depression இல்ல இல்லையா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு Pharmacy owner அவர் customer கிட்ட அடுத்த வாட்டி depression க்கு மருந்து வாங்கும் போது டாக்டரோட prescriptionனோட தான் வரணும். அப்பதான் நான் மருந்து தருவேன். நீங்க ஒவ்வொரு வாட்டியும் உங்க கல்யாண போட்டோவை காமிச்சு depression க்கு மருந்து வாங்குவது சரி இல்லை. தாம்பத்திய வாழ்க்கை என்பது கணவனும் மனைவியும் இணக்கமாக வாழ்வது. அப்படி வாழ்ந்தால் depression வரவே வராது.  எண்ணம் போல் வாழ்வு.

இக்கரைக்கு அக்கரை பச்சை | எண்ணம் போல் வாழ்வு

நம்போ காதலிக்கிற வயசுல நம்ம காதலை வீட்ல ஏத்துக்கலைன்னா வீட்டை விட்டு ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாமா என்ற எண்ணம் தோன்றுகிறது. கல்யாணமான பிறகு மனைவியின் தொல்லை தாங்கவில்லை என்றால் காட்டுக்கு ஓடிப் போகலாமா என்று எண்ணமும் வருகிறது. வாழ்க்கை என்பது இக்கரைக்கு அக்கரை பச்சை தான். நாம் commit ஆகுவதற்கு முன்பாக எவ்வளவு வேண்டுமானாலும் யோசிக்கலாம் ஆனால் commit ஆகிய பிறகு back அடிக்க கூடாது. இதை தான் திருவள்ளுவர் எண்ணித் துணிவது கர்மம் துணிந்த பின் எண்ணுவது என்பது இழுக்கு என கூறியிருக்கிறார். எண்ணம் போல் வாழ்வு.

Lamborghini, Ferrari car வாங்க plan போடுறீங்களா? | எண்ணம் போல் வாழ்வு

Lamborghini, Ferrari car எல்லாம் டிவியில் விளம்பரம் தருவதில்லை, ஏனென்றால் உலகில் உள்ள ஒரு சதவிகித பணக்காரர்கள் மட்டுமே இந்த கார்களை வாங்குகிறார்கள். இப்படிப்பட்ட பணக்காரர்கள் டிவியை பார்ப்பதில்லை. நாமும் Lamborghini, Ferrari இது போல் ஆக வேண்டுமென்றால் டிவி சீரியல் போன்றவற்றை பார்க்காமல் இருப்பது உத்தமம். நாம் நம் வாழ்வில் உழைப்பில் கவனம் செலுத்துவோம். எண்ணம் போல் வாழ்வு.

யாரைப் பற்றியும் சற்றென்று ஒரு முடிவுக்கு வராதீர்கள் | எண்ணம் போல் வாழ்வு

ஒருத்தர் சொன்னாரு அடுத்த வாரம் எல்லாரையும் பாத்துக்குறேன் ஒவ்வொருத்தரையா பாத்துக்குறேன். நீங்க அவர பத்தி என்ன நினைக்கிறீங்க கோபக்காரர்? சண்டை போடுபவர? அவர் அடுத்ததா என்ன சொன்னார் தெரியுமா என் கண்ணுக்கு பரிசோதனை பன்னேன். அடுத்த வாரம் எனக்கு கண்ணாடி கிடைத்துவிடும் அப்புறம் ஒவ்வொருத்தரையும் கிளியரா பார்ப்பேன். நம்போ ஒருத்தர் பேசுர ரெண்டு வரியில் வைத்து அவரைப் பற்றி ஒரு முடிவுக்கு வரக்கூடாது. அவர் முழுமையாக பேசின பிறகு நாம் ஒரு முடிவுக்கு வருவது நல்லது. எண்ணம் போல் வாழ்வு.

நீங்க எப்படி feel பண்றீங்க? | எண்ணம் போல் வாழ்வு

நான் ஒல்லியாக இருக்கிறேன் நான் குண்டாக இருக்கிறேன் என் முகம் லட்சணமாக இல்லை என்றெல்லாம் யோசிக்கிறீர்களா? நீங்கள் உங்கள் உடலை தயார் செய்து, முகத்தையும் பார்க்கும் படி செய்தாலும் உங்களை யாரும் பார்க்கப் போவது இல்லை. ஏனென்றால் நாம் முதன் முதலில் ஆழ்மனதில் நாம் மிக மிக சிறப்பான மனிதர் என்பதை எண்ணத்தில் கொண்டு வர வேண்டும். ஒரு positive attitude இருக்க வேண்டும். அப்போது தான் வெளிப்புறத்திலும் நாம் பார்க்க லாயக்காக, லட்சனமாக இருப்போம். எண்ணம் போல் வாழ்வு.

நீங்க thoroughவ தானே படிக்கிறீங்க? | எண்ணம் போல் வாழ்வு

பள்ளிக்கூடத்தில் படிக்கிற ஒரு பொண்ணு அவங்க அப்பா சொன்னதா சொல்றா எந்த ஒரு classலேயும் நம்ம thoroughவ படிக்கணும்  அவங்க அப்பா சொன்னதா சொல்றா. அப்படி thorough படிக்க வேண்டி இருக்கிறதுனால சில கிளாஸ்ல ரெண்டு மூணு வருஷம் கூட படிக்க வேண்டி இருக்கும் அதனால என்ன ஒரு weak student அப்படின்னு முடிவு பண்ணிடாதீங்க. இந்த காலத்து குழந்தைகள் ரொம்ப ஸ்மார்ட்டா பேசுறாங்க உண்மையில குழந்தைகள் நல்லாவும் படிக்கணும் அந்தந்த வருஷத்துலையும் பாஸ் ஆகணும். எண்ணம் போல் வாழ்வு.

நண்பர்கள் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் | எண்ணம் போல் வாழ்வு

நம் நண்பர் ஒருத்தர் கருத்து வேறுபாட்டின் காரணமாக நம்மை விட்டு பிரிந்து விட்டார் என எடுத்துக் கொள்வோம்.  நாம் நண்பர்களாக இருந்த போது நாம் நம்முடைய பல ரகசியங்களை அவரிடம் கூறியிருப்போம். இப்போது நட்பு  பிரிந்த பிறகும் அவர் நம் ரகசியத்தை காக்கிறார் என்றால். நாம் ஒரு சிறந்த நண்பரை இழந்து விட்டோம் என்று அர்த்தம். வாழ்க்கையில் நண்பர்கள் நமக்கு கிடைத்த சொத்து அல்லது வரப்பிரசாதம். சிறிய சிறிய கருத்து வேறுபாடுகளின் காரணமாக நாம் நம் நட்பை இழக்க வேண்டாம். எண்ணம் போல் வாழ்வு.

அடுத்தவர்களுக்கு உதவ நம்மிடம் என்ன வேண்டும்? | எண்ணம் போல் வாழ்வு

இந்த உலகத்தில் optimistic, pessimistic என இரு தரப்பு மக்களும் இருக்கிறார்கள். அதாவது நேர்மறை சிந்தனை உள்ளவர்கள் எதிர்மறை சிந்தனை உள்ளவர்கள். நேர்மறை சிந்தனை உள்ளவர்கள் விமானத்தை கண்டுபிடிக்கிறார்கள் எதிர்மறை சிந்தனை உள்ளவர்கள் பயத்தினால் பாராசூட் கண்டுபிடிக்கிறார்கள். இந்த நாடகமே இந்த இரு தரப்பு மக்களால் தான் சுவாரிசமாக இருக்கிறது. எண்ணம் போல் வாழ்வு.

தியானம் கற்பதால் என்ன பலன்? | எண்ணம் போல் வாழ்வு

நாம் மெடிடேஷன் கற்பதால் அதாவது தியானம் கற்பதால் நம் வாழ்க்கையின் சூழ்நிலை கெட்டதிலிருந்து நல்லதாக மாறப்போவது இல்லை. தியானம் கற்பதால் நாம் மாறுவோம் அதாவது நம்முடைய புத்திசாலித்தனம் கூடும் மனதில் நல்ல தேவையான சிந்தனைகள் உருவாகும். அதனால் நம் சூழ்நிலை மாறும். வெற்றிகள் குவியும். நாம் ஒவ்வொருவரும் தியானம் கற்போம் நம் வாழ்வை சிறப்பாக வைத்துக் கொள்வோம். எண்ணம் போல் வாழ்வு

Positive & Negative | எண்ணம் போல் வாழ்வு

நேர்மறையாக சிந்திப்பது அதாவது பாசிட்டிவாக யோசிப்பது நல்ல விஷயம் ஆனால் HIV Positive, Corona Positive இதுவெல்லாம் நல்ல விஷயம் அல்ல. ஒருவருடைய குணம் நெகட்டிவ் அது கெட்டது. ஆனால் HIV Negative, Corona Negative இது கெட்ட விஷயம் அல்ல. பாசிட்டிவ் எல்லாம் நல்ல பாசிடிவ் அல்ல நெகட்டிவ் எல்லாம் கெட்ட நெகட்டிவும் அல்ல. எண்ணம் போல் வாழ்வு.

ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பண்பாடு | எண்ணம் போல் வாழ்வு

ஒருவனிடம் அவன் திருமணம் ஆசையை பற்றி கேட்கும் போது அவன் கூறியதாவது எனக்கு திருமணத்துக்குப் பிறகு 6, 7 குழந்தைகள் இருக்க வேண்டும். அந்த ஆறு ஏழு குழந்தைகளின்  தாயார் வெவ்வேறு ஆளாக இருக்க வேண்டும் என்று கூறினான். இது ஆசை அல்ல. இது வக்கிரம். ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பாரம்பரியம். நாம் நம் பண்பாடுடன் வாழ்வோம். தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்வோம். எண்ணம் போல் வாழ்வு.

நம் உழைப்பை நம்புவோம் | எண்ணம் போல் வாழ்வு

இறைவன் நமக்கு table, chair போன்றவற்றை தருவதில்லை அவர் தருவதெல்லாம் ஒரு மரம் தான் அதை வைத்துக் கொண்டு ஒரு தச்சரை பயன்படுத்தி நாம் நமக்கு தேவையான பொருட்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதேபோல இறைவன் நமக்கு திறமையும் ஆற்றலையும் தருகிறார் அதை வைத்து நாம் நமக்கு தேவையான செல்வம் பொருள் ஈட்டிக் கொள்ள வேண்டும். கூரையை பியித்துக் கொண்டு பணம் வரும் என காத்து இருப்பது முட்டாள்தனம். நாம் உழைப்பை நம்புவோம் சிறப்பாக வாழ்வோம். எண்ணம் போல் வாழ்வு.

வாழ்க்கை என்பது கொண்டாட்டம் | எண்ணம் போல் வாழ்வு

ஒருத்தருடைய மனைவி தன் கணவரிடம் நமக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆயிடுச்சு நாட்கள் போனதே தெரியலங்க என்று கூறினார். அதற்கு கணவர் எனக்கு நாட்கள் நகர்ந்தது தெரியும் என்று கூறினார். நாம் சந்தோஷமாக இருந்தால் ஒரு வருடம் கூட ஒரு நிமிடம் போன்று தோன்றும். நாம் துக்கத்தில் இருந்தால் ஒரு நிமிடம் ஒரு வருட போன்று தோன்றும். வாழ்க்கை என்பது ஒரு கொண்டாட்டம். அதை ரசித்து வாழ வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

Timing ரொம்ப முக்கியம் நண்பர்களே | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பையன் ஒரு பெண்ணை காதலிச்சான் அவன் நண்பன் கிட்ட காதல் ஜெயிக்க ஐடியா கேட்டான். அதுக்கு அந்த நண்பன் உன் கிட்ட நல்ல வேலை, கை நிறைய பணம், பைக்கு, கார், சொந்தவீடு இதெல்லாம் சம்பாதிச்சு நீ அந்த பெண்ணு கிட்ட போய் propose பண்ணுனா அந்த பொண்ணு சம்மதிப்பா அப்படின்னு சொன்னான்.  இது எல்லாம் ரெடி பண்ணி அந்த பொண்ணு கிட்ட propose பண்ண போகும்போது தான் தெரிஞ்சுது அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தை இருக்குன்னு.  வாழ்க்கையில planning ரொம்ப முக்கியம் அது போல execution ரொம்ப முக்கியம் அதைவிட timing ரொம்ப ரொம்ப முக்கியம்.  எண்ணம் போல் வாழ்வு.

வாழ்க்கை என்னும் பள்ளிக்கூடத்தில் நீங்கள் மாணவரா? | எண்ணம் போல் வாழ்வு

நாலு நண்பர்கள் காரில் போகும்போது அவர்கள் கார் பிரேக் டவுன் ஆகிவிட்டது அப்போது அதிலிருந்த  மெக்கானிக்கல் இன்ஜினியர் சொன்னார் காரில் ஸ்டார்டர் பிரேக் டவுன் ஆகிவிட்டது என்று. கெமிக்கல் இன்ஜினியர் சொன்னார் gasoline impurities கலந்து இருக்கிறது என்று. எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் சொன்னார் பேட்டரி டவுன் என்று. கம்ப்யூட்டர் இன்ஜினியர் சொன்னார் அனைவரும் காரை விட்டு இறங்கவும் பிறகு ஏறவும் அப்போது கார் ஸ்டார்ட் ஆகிவிடும் என்று. ஏன் நாலு பேர் நாலு அபிப்பிராயம் கூறுகிறார்கள், ஏனென்றால் அவர்களுடைய ஞானம் அப்படிப்பட்டது. இந்த வாழ்க்கை என்னும் பள்ளிக்கூடத்தில் நாம் தினமும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் ஏனென்றால் வாழ்க்கை நமக்கு பாடம் கற்பிப்பதை நிறுத்துவதில்லை. எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் மனநலம் எப்படி இருக்கிறது? | எண்ணம் போல் வாழ்வு

நம்மைப் பார்த்து யாராவது மெண்டல் என்று கூறினால் நாம் உடனே கோபப்படக்கூடாது சற்று தள்ளி நின்று இவர் எப்படி இதை கண்டுபிடித்தார் என்று யோசிக்க வேண்டும். ஏனென்றால்  WHO (World health organisation) சொல்கிறது உலகில் உள்ள அனைவரும் ஏதாவது ஒரு மனநோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று. நாம் சந்தோஷப்பட வேண்டியது நாம் மன நோய்க்கு மருந்து ஏதும் எடுக்கும் நிலையில் இல்லாதது. நம் மனநலம் சிறப்பாக இருப்பதற்காக நாம் தினசரி தியானம் செய்வோம். எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு உணவு சமைக்க தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு மாமியார் அவர் மருமகளிடம் உனக்கு உங்க வீட்டில் சமைக்க கற்றுத் தரவில்லையா என்று கேட்டார் அதற்கு மருமகள் எங்கள் வீட்டில் Zomato, Swiggy யில் online food order என்ன கத்து கொடுத்து இருக்காங்க அத்தை என்று கூறினார். நாம் ஒரு நாள் மூன்று வேளை உணவு சாப்பிட வேண்டியிருக்கிறது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சமைக்க கற்றுக் கொள்வது போது மிக மிக முக்கியம். அது நம் ஆரோக்கியத்தையும் காக்கும். நம் ஹோட்டல் Bill யும் குறைக்கும். எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு பதற்றம் ஒன்றும் இல்லையே? | எண்ணம் போல் வாழ்வு

வாழ்க்கை தரும் சவால்கள் நமக்கு பதட்டத்தை தருகிறதா அல்லது பதற்றமான சூழ்நிலையில் நாம் லேசாக இருக்கிறோமா என்பதை பொறுத்து நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கிறதா அல்லது மோசமாக இருக்கிறதா என்பது தீர்மானிக்கப்படுகிறது. எந்த சவால்கள் வந்தாலும் தேவையான தீர்வு நம்மிடம் இருந்தாலோ, அல்லது தீர்வு தெரிந்தவர் நமக்கு தெரிந்திருந்தாலோ நமக்கு எந்த ஒரு பதற்றமும் இருக்காது. எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் துணைவர் எப்படிப் பட்டவர்? | எண்ணம் போல் வாழ்வு

ஒருத்தருடைய மனைவி தன் கணவரிடம் கல்யாணத்துக்கு முன்னாடியே நீங்க தண்ணி அடிப்பீங்க அப்படின்னு ஏன் எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லல என்று கேட்டார். அதற்கு கணவர் நீ ஆண்களின் ரத்தத்தை குடிப்பாய் என்பதை கல்யாணத்துக்கு முன்னாடி ஏன் எனக்கு சொல்லவில்லை என்று கேட்டார். தாம்பத்திய வாழ்வில் கணவனும் மனைவியும் இப்படி சண்டை போட்டுக் கொண்டிருந்தால் குடும்பம் எப்படி நடக்கும். தாம்பத்திய வாழ்க்கையில் கணவனும் மனைவியும் விட்டுக் கொடுத்து வாழ்வதே சிறப்பான வாழ்வியல் ஆகும். எண்ணம் போல் வாழ்வு.

உங்க மனசுல இருக்கிறது யாரு? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பையன் காதல்னு சொல்லிட்டு ஒரு பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருந்தான். அந்தப் பொண்ணு கோவத்துல என் பின்னாடி சுத்துனா கத்தி எடுத்து உன் நெஞ்சில் குத்திடுவேன்னு சொன்னாள். அதுக்கு அந்த பையன் நீ குத்துனா நீ தான் சாவ அப்படின்னு சொன்னான்.  அதுக்கு அந்த பொண்ணு நான் உன்னை கத்தியால குத்தன நான் எப்படி சாவேன் அப்படின்னு கேட்டா. அதுக்கு அந்த பையன் என் மனசுல நீ தானே இருக்க. அப்படின்னு பதில் சொன்னான். இந்த காலத்து பசங்க ரொம்ப ஸ்மார்ட்டா இருக்காங்க, ஸ்மார்ட்டா பேசுறாங்க. இந்த திறமை எல்லாம் படிப்பிலும் வேலையையும் காமிச்சாங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் சிறந்த Padipistஅ? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பரீட்சையில் 10 கேள்விகள் கேட்டு அதில் 5-க்கு பதில் அளிக்குமாறு கூறியிருந்தார்கள். அதற்கு ஒரு மாணவர் 10 கேள்விகளுக்கும் பதில் கூறி கீழே ஒரு குறிப்பு இட்டிருத்திருந்தார். உங்களுக்கு வேண்டிய ஐந்து பதிலை எடுத்துக் கொள்ளுங்கள் என்று.  இந்த மாணவனை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். அவன் ஒரு புத்திசாலி, அறிவாளி, படிப்பிஸ்ட், அசடு, ஆபத்தம்.  ஒரு நிகழ்வுக்கு பல அபிப்ராயங்கள் வருவதற்கான காரணம் என்ன?  ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சிந்திக்கிறார்கள் இதனால் தான் நாம் கூறுகிறோம். எண்ணம் போல் வாழ்வு.

அடுத்தவர்களுக்கு உதவ நம்மிடம் என்ன வேண்டும்? | எண்ணம் போல் வாழ்வு

நாம் அடுத்தவர்களுக்கு உதவியாக இருக்க நாம் பெரும் பணக்காரராகவோ, பெரும் படிப்பு படித்திருக்க வேண்டும் என்பதோ, அறிவாளியாக, புத்திசாலியாக, பதிவு, செல்வாக்குடன் இருக்க வேண்டும் என்பது அல்ல. நமக்கு சக மனிதன் மீது ஒரு அக்கறை இருந்தால் போதுமானது. நாம் அடுத்தவர்களுக்கு வேண்டி பிரார்த்திக்கலாம், நமக்குத் தெரிந்த ஞானத்தை இலவசமாக கொடுக்கலாம், நம்மிடம் 100 ரூபாய் இருந்தால் அதில் 20 ரூபாய் தானம் தர்மம் செய்யலாம். எண்ணம் போல் வாழ்வு.

வியாபாரத்தில் தோல்வியா? | எண்ணம் போல் வாழ்வு

வியாபாரத்தில் நஷ்டம் வருவது சகஜம் சில நேரங்களில் அது ஆயிரங்களிலும் சில நேரங்களில் அது லட்சங்களிலும் இருக்கிறது. நாம் அந்த சம்பவத்திலிருந்து ஒரு பாடம் கற்று வியாபாரம் செய்தால் நாம் கோடிகளில் சம்பாதிக்க முடியும். வியாபாரத்தில் நஷ்டம் அடைவது தோல்வி அல்ல, அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாததே தோல்வியாகும்.  நாம் பாடம் கற்போம் நம் வாழ்வை சிறப்பாக வைத்துக் கொள்வோம்.  எண்ணம் போல் வாழ்வு 

சில தோல்விகளையும் கொண்டாடலாம்? | எண்ணம் போல் வாழ்வு

சில முயற்சிகள் கடைசி கட்டத்தில் வந்து தோற்கலாம். அப்படிப்பட்ட தோல்விகளை நாம் கொண்டாடலாம். ஏனென்றால் அந்த தோல்விகள் வெற்றி மிக அருகாமையில் இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. அந்த தோல்வி நமக்கு ஊக்கம் உற்சாகம் தருகிறது வெற்றியடைவதற்காக. நாம் ஒன்று இரண்டு முயற்சி எடுத்தால் வெற்றி காணலாம். அதனால் நாம் வெற்றி பெற்றால் தான் கொண்டாட வேண்டும் என்பது அல்ல, சில தோல்விகளையும் கொண்டாடலாம். எண்ணம்‌ போல் வாழ்வு.

ECRல Resort book பண்ணீட்டிங்களா? | எண்ணம் போல் வாழ்வு

மனசு சந்தோஷமாக இருக்க ECRல Resort book பண்ணனும் அவசியம் இல்லை. நாம் ACR பயன்படுத்தினால் போதுமானது.  ACR ல Aன்னா Accept. வாழ்க்கையில் நடக்கிற நல்ல கெட்ட சம்பவங்களை அப்படியே Accept பண்ணவோம். Cன்னா Change. Accept பண்ண முடியாததை Change பண்ணுவோம். Rன்னா Remove. Change பண்ண முடியாததை Remove பண்ணுவோம். அப்போ வாழ்க்கை சிறப்பா இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

நாமும் எப்போதும் சந்தோஷமாக இருக்க முடியும் | எண்ணம் போல் வாழ்வு

எப்போதும் சந்தோஷமாக இருப்பவர்கள் இந்த நான்கு காரியங்களை செய்கிறார்கள். 1. அடுத்தவர்கள் கூறும் தேவையற்ற விஷயங்களை இவர்கள் கவனிப்பதே இல்லை. 2. அவர்கள் எப்போதும் குறைவாகவே பேசுவார்கள். 3. அவர்கள் நேரம் கிடைக்கும்போது எல்லாம் புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். 4. அவர்கள் எப்போதும் அடுத்தவர்களுக்கு உதவுவதற்கு எண்ணிக் கொண்டிருப்பார்கள். இந்த நான்கு விஷயங்களை நாமும் செய்ய முடியுமே. அப்பொழுது நாமும் சந்தோஷமாக இருக்கலாமே. எண்ணம் போல் வாழ்வு.

சுகம் துக்கம் யாரிடம் பகிரலாம்? | எண்ணம் போல் வாழ்வு

நம் துக்கத்தை அடுத்தவரிடம் பகிரும்போது நம் மனதில் உள்ள பாரம் குறைகிறது. நம் சந்தோஷத்தை அடுத்தவரிடம் பகிரும்போது நம் மனதில் சந்தோஷம் அதிகரிக்கிறது. இந்த கலிகாலத்தில் நம் துக்கத்தை அடுத்தவரிடம் பகிரும் போது அதைக் கண்டு சந்தோஷப்படுபவர்களும் இருக்கிறார்கள். அதனால் நம் துக்கத்தை இறைவனிடமும், நம் சந்தோஷத்தை சொந்தம் பந்தம் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்வோம். எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் பக்கத்து வீட்டில் புது குடுத்தனம் வந்திருக்காங்களா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு அம்மா சொல்றாங்க அவங்க பக்கத்து வீட்ல ஒரு புது குடுத்தனம் வந்திருக்காங்கன்னு. அவங்க வீட்ல இருக்க எல்லாரும் பார்க்க லட்சணமா இருக்காங்க ஆனா பேசி பார்த்தால் தான் தெரியும் அவங்க குணம் என்னன்னு. இப்படி அவங்க சொல்றதுக்கு காரணம் ஒருத்தருடைய சொல் அவர்கள் எண்ணங்களிலிருந்து உருவாகிறது. ஒரு நல்ல எண்ணம் நல்ல சொல்லாகுது. நல்ல சொல் நல்ல செயல் ஆகுது. அதனாலதான் சொல்றோம். எண்ணம் போல்  வாழ்வு.

பயம் பற்றிய பயம் என்ன செய்யும் தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

நம் வாழ்வில் பெரிய பிரச்சனை எது தெரியுமா நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் விருந்தாளிகள் போல வருகின்றன அதை நாம் முதலாளி போல் மனதில் நிறுத்துவது தான். பயத்தை பற்றிய பயம் தான் மிக பெரிய பயமாக இருக்கிறது. உண்மையில் அந்த சம்பவம் நடந்தாலும் நாம் இப்படி பயந்திருக்க மாட்டோம். அதனால் நாம் எப்போதும் நேர்மறையான எண்ணங்களை உருவாக்குவோம். எண்ணம் போல் வாழ்வு.

சுகம் துக்கம் எதை பொறுத்து இருக்கிறது? | எண்ணம் போல் வாழ்வு

யார் ஒருத்தர் தன் வாழ்வில் நடக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் நன்றி உணர்வுடன் இருக்கிறாரோ அவர் எப்போதும் சந்தோஷமாக இருப்பார்.  யார் ஒருவர் நம் வாழ்வில் நடக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் குறை கூறிக் கொண்டிருக்கிறார் அவர் எப்போதும் துக்கத்தில் இருப்பார்.  அதனால் நாம் எப்போதும் நன்றி உணர்வுடன் இருப்போம். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் அதிர்ஷ்டசாலியா? புத்திசாலியா? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு தங்குவதற்கு ஒரு வீடு, உடுத்த உடை, உண்ண மூன்று வேளை உணவு இருக்குமானால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. உங்கள் வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாக இருந்து அதை வெற்றிகொண்டு சிறப்பாக வாழ்வீர்கள் ஆனால் நீங்கள் புத்திசாலி. வாழ்க்கை என்றால் சவால்கள் வரத்தான் செய்யும் அதை எதிர் கொண்டு தான் ஆக வேண்டும் அது ஜெயித்து நாம் சிறப்பாக வாழ வேண்டும். நீங்கள் அதிர்ஷ்டசாலியா? புத்திசாலியா? அல்லது இரண்டுமா? எண்ணம் போல் வாழ்வு.

இளைஞர்களே காதல் கத்திரிக்காய் என வாழ்க்கையை தொலைக்க வேண்டாம்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் என் பக்கத்துக்கு வீட்டு பையனிடம்  உன் வயது பிள்ளைகள் மிகவும் துருதுருவென இருப்பார்கள் ஆனால் நீ மிகவும் மந்தமாக இருப்பது ஏன் என்று கேட்டார். அதற்கு அந்தப் பையன் அங்கிள் என்னுடைய மூளை கம்ப்யூட்டர் பொல ஆனால் இப்போது ஒரு பெண்ணை விரும்புவதால் எனது மூளை மழுங்கி விட்டது அதனால் உங்களுக்கு மந்தமாக தெரிகிறது என்றான். இளைஞர்கள் படிக்கின்ற வயதில் படிக்க வேண்டும், வேலை செய்கின்ற வயதில் வேலை செய்ய வேண்டும், கல்யாண வயதில் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்க்கையின் சிறப்பாக இருக்கும். காதல் கத்திரிக்காய் என இளமையில் திரிந்தால் வாழ்க்கை நாசமாக போய்விடும். எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் கனவு பலித்து விட்டதா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் தன் நண்பர் வீட்டுக்கு சென்று அவருடைய மகனிடம் உன் வயது பிள்ளைகள் அவர்களுடைய கனவுகளை நினைவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நீ உன் கனவை நினைவாக்கி விட்டாயா? அதற்கு அந்தப் பையன் எங்கே uncle எங்க வீட்ல தூங்கவே விட மாட்டாங்க அப்ப தானே கனவு காண்றதுக்கு. திரு அப்துல் கலாம் ஐயா கூறுகிறார் இரவில் உறக்கத்தில் வருவது கனவு அல்ல நம்மை தூங்க விடாமல் இருப்பது தான் கனவு என்று. நாம் நம் இலட்சியத்தை நோக்கி உழைப்போம். சந்தோஷமாக இருப்போம். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் கோடீஸ்வரரா? | எண்ணம் போல் வாழ்வு

ஒருவர் அடுத்தவரிடம் நான் ஒரு கோடீஸ்வரர் என கூறினார்.  அப்படி என்ன உங்களிடம் இருக்கிறது என அவர் கேட்டார். அதற்கு இவர் எனக்கு சொந்தமாக ஒரு பேங்க் இருக்கிறது என கூறினார். அவர் நீங்கள் எந்த பேங்குக்கு முதலாளி என கேட்டார். அதற்கு இவர் பவர் பேங்க் (Power Bank) என்றார். உண்மையில் ஒரு கோடீஸ்வரர் பணிவாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும் அதுதான் ஒரு பெரிய மனிதனின் சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் பேசும் போது இதை கவனிக்கிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

ஒருத்தர் Customer Careக்கு கூப்பிட்டார் அந்தப் பக்கத்தில் ஒரு பெண் சொல்லுங்க சார் நான் என்ன உதவி செய்யட்டும். அவர் சொன்னார் என் வீட்டில் என் மனைவி இல்லை என்று சொல்லி ஒரு pause செய்தார். உடனே அந்தப் பெண் காலையிலேயே தொந்தரவு செய்யாதீர்கள் சார் என்று கூறி phone cut செய்துவிட்டார். நாம் பேசும்போது தொடர்ச்சியாக பேச வேண்டியதை தொடர்ச்சியாகவும், நிறுத்த வேண்டிய இடங்களில் நிறுத்தியும் பேசவேண்டும் இல்லை என்றால் பிரச்சினைகளை உருவாக்கும். எண்ணம் போல் வாழ்வு.

Science என்ன சொல்லுது Moral Science என்ன சொல்லுது? | எண்ணம் போல் வாழ்வு

Science சொல்கிறது நம் நாவில் ஏற்படும் புண்ணானது சீக்கிரம் சரியாகிவிடும் Moral Science சொல்கிறது நம் நாவினால் பேசும் வார்த்தை அடுத்தவரை காயப்படுத்தி அவருக்கு பல வருடம் துக்கத்தை கொடுக்கும் அதனால் தான் நாம் அடிக்கடி கூறுகிறோம் எண்ணம் சொல் செயல் மூலம் யாருக்கும் துக்கம் கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் வீட்டை coolலாக வைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

வருடம் முழுவதும் நம் வீட்டு temperature ஐ சீராக வைக்க வெயில் காலத்தில் ஏசியையும் பணிக்காலத்தில் heater யையும் பயன்படுத்துகிறோம். ஆனால் உண்மையில் நம்ப வீடு temperature சீராக இருக்க நம் வீட்டில் உள்ளவர்கள் இனிமையாக பேசவேண்டும் மற்றும் அவர்கள் மனசு நன்றாக இருக்க வேண்டும். அப்போது நம் வீடு என்றும் கூலாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

மாணவர்களே நீங்கள் யாருக்கு வேண்டி படிக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு அப்பா தன் பையன் கிட்ட ஏன்டா பரிட்சையில் பெயிலான்னு கேட்கிறார். அதுக்கு பையன் அப்பா பரீட்சையில் எல்லா கேள்வியும் out of syllabus அதுனாலத்தான் நான்  fail ஆயிட்டேன். அதுக்கு அப்பா ஆனாலும் நீ எல்லா கேள்விக்கும் பதில் எழுதி இருக்கியே. அதுக்கு பையன் நான் எழுதின எல்லா விடையும் out of syllabus அப்பா. மாணவர்கள் பள்ளிக்காகவோ, மதிப்பெண்களுக்காகோ படிக்கக் கூடாது. தன்னுடைய புரிதலுக்காகவும் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்காகவும் படிக்க வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

எல்லா சூழ்நிலையிலும் நீங்கள் React பண்றீங்களா? Respond பண்றீங்களா? | எண்ணம் போல் வாழ்வு

காட்சி 1 :- ஒருவர் நம் மீது கோபப்படுகிறார் நாம் உடனே React செய்கிறோம் அதாவது உனக்கு மட்டும் தான் கோபப்பட முடியுமா நானும் கோபப்படுகிறேன் என்று கோபப்படுவது. இது உறவை முறிக்கும். காட்சி-2 ஒருவர் நம் மீது கோபப்படுகிறார் நாம் அதை Accept செய்கிறோம். அதாவது அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், கேட்டுக்கொள்கிறோம். அதற்குப் பிறகு பணிவாக பதில் அளிக்கிறோம் அல்லது தேவைக்கேற்ப அமைதியாக இருந்து விடுகிறோம். இப்படி செய்வதால் உறவுகள் பேனப்படுகிறது. அதனால் எப்போதும் React செய்வதற்கு பதிலாக Accept செய்து Respond செய்வோம்.  எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் வாழ்க்கை இனிக்கிறதா? கசக்கிறதா? | எண்ணம் போல் வாழ்வு

காட்சி 1 :-  நீங்கள் உங்கள் அலுவலகத்திற்கு கிளம்புகிறீர்கள். உங்கள் வண்டி சாவியை வைத்த இடத்தில் தேடுகிறீர்கள். அங்கு அந்த சாவி இல்லை. உடனே நீங்கள் சத்தம் போடுகிறீர்கள். உங்கள் மனைவி மக்கள் பயந்து போகிறார்கள். அவர்களே எடுத்தாலும் இல்லை என்று பயத்தால் பொய் சொல்கிறார்கள். காட்சி 2 :- நீங்கள் உங்கள் அலுவலகத்திற்கு கிளம்புகிறீர்கள் உங்கள் வண்டி சாவியை வைத்து இடத்தில் தேடுகிறீர்கள் அங்கே அந்த சாவி இல்லை நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களை சாவியை பார்த்தீர்களா என அன்பாக கேட்கிறீர்கள். யாராவது எடுத்திருந்தால் அவர்களாகவே முன்வந்து கொடுத்து விடுகிறார்கள் அல்லது எல்லோரும் சேர்ந்து அந்த சாவியை தேடுகிறார்கள். நாம் கோபப்பட்டால் உறவுகள் கசக்கும். நாம் அன்போடு பேசினால் உறவுகள் இனிக்கும். எண்ணம் போல் வாழ்வு.

நீங்க அடுத்தவர்களுக்கு Advice கொடுக்க போகிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

உங்கள் வீட்டுக் குழந்தை சரியாக படிக்கவில்லை அதனால் அந்த குழந்தைக்கு அறிவுரை கூற முடிவு செய்கிறீர்கள். அதற்கு முன்பாக உங்களுக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. அதாவது இந்த குழந்தை படிப்பதற்கு லாயக்கில்லை, இது மாடு மேய்க்கத்தான் போகிறது. அதற்கு பிறகு நீங்கள் அரை மணி நேரம் குழந்தை படிக்க அறிவுரை கூறினாலும் ஒரு உபயோகமும் இல்லை ஏனென்றால் நீங்கள் ஒரு எதிர்மறை சுவரை எழுப்பி அங்கிருந்து கருத்து கூறினீர்கள். நாம் நேர்மறை எண்ணங்களை உருவாக்கி நேர்மறையாக பேசினோம் என்றால் மிக நல்ல மாற்றம் உண்டாகும்.  ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் உங்கள் மனைவியிடம் வாதாடி செய்திருக்கிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

வக்கீலுக்கே படிக்காம சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி சில பேர் ஜெயிக்கலாம். வக்கீலே ஆனாலும் வீட்டில் மனைவியிடம் வாதாடி ஜெயிக்க முடியாமல் போகலாம். தாம்பத்திய வாழ்க்கையில் மனைவி செய்கிறாரா? கணவர் ஜெயிக்கிறாரா? என்பது முக்கியமல்ல. தாம்பத்தியம் தோற்க கூடாது. கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் தாம்பத்திய வாழ்க்கை ஜம்முனு இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

அடுத்தவர் பார்வையில் நீங்கள் ஹீரோவா? வில்லனா? | எண்ணம் போல் வாழ்வு

நம்ப வாழ்க்கையில நம்ப ஹீரோவாக இருக்கலாம். சில பேர் பார்வையில் நாம் வில்லனாக தெரியலாம். யார் பார்வையில் நம்ப ஹீரோ யார் பார்வையில் நம்ப வில்லன் என்பது நமக்கு தெரியாது. எது எப்படியோ நாம் நல்லவர்களாக நல்ல கர்மங்களை செய்தபடி வாழ்ந்து விட்டு போவோம். எண்ணம் போல் வாழ்வு.

சில வார்த்தைகளுக்கு பல அர்த்தம் உள்ளது உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஆங்கிலத்தில் open என்ற வார்த்தைக்கு அர்த்தம் திறப்பது close என்ற வார்த்தைக்கு அர்த்தம் மூடுவது. ஆனால் இதே வார்த்தைகளுக்கு வேறு சில அர்த்தங்களும் உள்ளது. நம்போ எப்பவுமே அன்பா பரிவா நடக்கும் போது அதாவது open னாக நடக்கும் போது. மக்கள் நம் அருகாமையில் வருவாங்க அதாவது closeஅ வருவாங்க. எண்ணங்கள் எவ்வளவு தூய்மையாக இருப்பது  நல்லதோ அது போல சொற்களில் பல அர்தங்களை தெரிந்து பேசுவது மிக மிக நல்லது. எண்ணம் போல் வாழ்வு.

சந்தோசம் எத்தனை Type? | எண்ணம் போல் வாழ்வு

நம்ப ஒருத்தர கிண்டல் பண்ணலாம், கேலி செய்யலாம் அதன் மூலம் நாம் சந்தோஷம் அடையலாம். ஆனால் அதுல நமக்கு சந்தோஷம், அவர்களுக்கும் தூக்கம் நாம் செய்யும் செயல் நமக்கு பாவத்தை கொண்டு வரும். நாம் அடுத்தவர்களுக்கு உண்மையிலேயே சந்தோஷம் கொடுத்தால். நமக்கும் சந்தோஷம், அவருக்கும் சந்தோஷம் நாம் செய்யும் செயல் புண்ணியமாக மாறிவிடும். அதனால் நாம் எப்போதும் இந்த இரண்டாவது முறையை கடைபிடிப்போம். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் உண்மையில் Powerfulஅ? | எண்ணம் போல் வாழ்வு

உங்கள் நாள் இன்று சிறப்பாக தொடங்கி இருக்கிறது என வைத்துக் கொள்வோம் அப்போது உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்போ அல்லது வாட்ஸ்அப் மெசேஜ் வந்து நீங்கள் அப்செட் ஆகி விட்டீர்கள் என்றால் நீங்கள் எப்படிப்பட்டவர். சந்தோஷமாக இருந்த நீங்கள் அப்செட் ஆகிவிட்டீர்கள் அப்போது நீங்கள் powerfulஅ அல்லது உங்களை ஆப்செட் செய்தவர் அவர் powerfulஅ. எந்த சூழ்நிலையிலும் நாம் அப்செட் ஆகக் கூடாது. அதற்கு நாம் ஒவ்வொருவரும் இராஜயோக தியானம் பயிற்சி செய்ய வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

வாழ்க்கையை lightஅ எடுத்துக்கங்க | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் ஒரு கரப்பான் பூச்சியை அடிக்க போனார். அப்போது அந்த கரப்பான் பூச்சி அவரைப்பார்த்து சொன்னது. உங்களுக்கு உங்கள் மனைவியை கண்டால் பயம். உங்கள் மனைவிக்கு என்னை கண்டால் பயம். நீங்கள் உண்மையான வீரராக இருந்தால் உங்கள் வீரத்தை உங்கள் மனைவியிடம் காட்டுங்கள். நம் வாழ்வில் எல்லாவற்றையும் சீரியஸாக எடுத்தால் நாம் வாழ்க்கை வாழ முடியாது. நாம் நம் வாழ்க்கையை மிக இலேசாக எடுத்துக் கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் வாழ்க்கை பிரச்சினையை என்ன செய்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

உங்கள் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் அல்லது சவால்களை உடனே முடித்து விடுங்கள். அல்லது அதனை விட்டு விடுங்கள். அந்த பிரச்சினையோடு வாழாதீர்கள். ஒரு பேனாவை இரண்டு நிமிடம் கை நீட்டி பிடிக்க முடியும், ஆனால் அதே பேனாவை இரண்டு மணி நேரம் பிடித்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் நாம் நம் பிரச்சனைகளை, சவால்களை உடனுக்குடன் முடிப்போம் அல்லது அப்படியே விட்டுவிடுவோம். பிரச்சினையை தலையில் சுமந்து கொண்டு துன்புற வேண்டாம். எண்ணம் போல் வாழ்வு.

இறைவன் யாருக்கும் துக்கம் கொடுப்பதில்லை? | எண்ணம் போல் வாழ்வு

இறைவன் அன்பின் கடல். இறைவன் யாருக்கும் துக்கம் கொடுப்பதில்லை. நாம் அடையும் துன்பம் நாம் செய்த வினைப் பயனே. அதனால்தான் நாம் திரும்பத்திரும்ப கூறுகிறோம் எண்ணம் சொல் செயல் மூலம் யாருக்கும் துக்கம் கொடுக்க வேண்டாம் என்று. ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் வெளி உலகத்திற்கு தருவது என்ன? | எண்ணம் போல் வாழ்வு

நம் உடலிலிருந்து வெளிவரும் வியர்வை, ரத்தம், எச்சில், கபம், மலம்,  சிறுநீர் இவை அனைத்தும் அருவெருப்பும் துர்நாற்றமும் தறுபவை ஆகும். ஆனால் நம் மனதில் எழும் எண்ணம், வாயிலிருந்து வரும் சொல், நாம் செய்யும் செயல் அடுத்தவருக்கு பிடித்ததாக இருக்க முடியும். நாம் செய்ய வேண்டியது எண்ணம், சொல், செயல் மூலம் 800 கோடி ஆத்மாவிற்கு சுகம், சாந்தி, செல்வம், மகிழ்ச்சி, ஆரோக்கியம் கொடுப்பது. எண்ணம் போல் வாழ்வு.

பொறுத்தார் பூமி ஆள்வார்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு தோட்டக்காரர் அவர் தோட்டத்தில் உள்ள செடி, கொடி, மரங்களுக்கு தினசரி தண்ணீர் ஊற்றுவார். அவருக்கு தனது செடி கொடி மரங்கள் காய் காய்ப்பது மற்றும் பழம் கொடுப்பது எப்போது என்பது தெரியும். அதற்காக அவர் காத்திருக்க தயாராக இருக்கிறார். அதே போன்று நாம் செய்யும் செயல்கள் வெற்றி அடைய அதற்கான கால அளவுக்கு காத்திருக்க வேண்டும். பொறுத்தார் பூமி ஆள்வார். எண்ணம் போல் வாழ்வு.

வாழ்க்கை என்னும் பள்ளிக் கூடத்தில் நீங்கள் யார்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு முட்டாள் தான் ஒரு முட்டாள் என்பதை எப்போது உணர்கிறானோ அப்போது அவன் புத்திசாலி ஆகின்றான். ஒரு புத்திசாலி தான் ஒரு புத்திசாலி என உலகத்திற்கு பிரகடனம் செய்யும் போது அவன் முட்டாள் ஆகுகிறான்‌ இந்த வாழ்க்கை என்னும்  பள்ளிக் கூடத்தில் நாம் ஒவ்வொருவரும் மாணவர்களே. நாம் பாடம் கற்றுக் கொள்ளாமல் இருந்தாலும். வாழ்க்கை நமக்கு பாடம் புகட்டாமல் இருப்பதில்லை. நமக்கு சிறந்த வாழ்க்கை வேண்டுமென்றால் நாம் சிறந்த மாணவனாக ஆகவேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

நீன்கள் மக்களைப் பார்க்கும் பார்வை என்ன? | எண்ணம் போல் வாழ்வு

நாம் ஒருவரைப் பார்க்கும்போது உயர்ந்தவர் என்றோ தாழ்ந்தவர் ஆகவோ பார்க்கக்கூடாது. ஏனென்றால் நமக்கு superiority complex அல்லது inferiority complex வரலாம். அதற்கு பதிலாக நாம் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் நாம் அவருடைய நன்மையான குணத்தை பார்த்தால் நாம் ஒரு சிறந்த மனிதராக ஆகலாம். அதனால்தான் அனைவருடைய நேர்மறையான குணத்தை மட்டும் பார்ப்போம்.  எண்ணம் போல் வாழ்வு.

யார் யாரெல்லாம் சோம்பேறி? | எண்ணம் போல் வாழ்வு

வேலை செய்யாதவர்கள் மட்டும் சோம்பேறிகள் அல்ல. செய்ய முடிந்ததையும் செய்யாதவர்கள் சோம்பேறிகளே. நாம் எல்லோரும் மூன்று காரியங்கள் செய்ய முடியும். 1. உலகில் உள்ள 800 கோடி ஆத்மாக்களுக்கும் சுகம், சாந்தி, செல்வம், மகிழ்ச்சி, ஆரோக்கியம் கிடைக்க பிரார்த்திக்க முடியும். 2. நமக்கு கிடைத்த ஞானத்தை இலவசமாக அடுத்தவர்களுக்கு கொடுக்க முடியும். 3. நம்மிடம் 100 ரூபாய் இருந்தால் பத்து ரூபாய் தானம் செய்யலாம். எண்ணம் போல் வாழ்வு.

பாவம் புண்ணியம் சரியான புரிதல் என்ன? | எண்ணம் போல் வாழ்வு

நாம் ஒரு பாவச்செயல் செய்து அதை உணர்ந்த பின் இறைவனிடம் தண்டனையை குறைக்குமாறு மன்றாடுகிறோம். இறைவன் நாம் செய்த புண்ணியத்தின் பலனை  குறைத்தால் நாம் ஏற்றுக்கொள்வோமா? இறைவன் நம் புண்ணியத்தின் பலனையும் பாவத்தின் தண்டனையையும் குறைப்பது இல்லை. நாம் செய்யும் நல்லதிற்கும் கெட்டதிற்கும் பலனை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். அதனால் நாம் எண்ணம் சொல் செயல் மூலம் யாரையும் காயப்படுத்தாமல் இருப்போம். ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.

வாழ்க்கை என்பது என்ன? | எண்ணம் போல் வாழ்வு

வாழ்க்கை என்பது இந்த பூமியில் எத்தனை வருடம் இருந்தோம் என்பது அல்ல. இருந்த வருடங்களில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பது தான்.  நாம் இந்த வாழ்க்கையில் மூன்று நாட்கள் மட்டுமே வாழவேண்டும் ஒன்று நேற்று, இரண்டு இன்று, மூன்று நாளை. இதில் நேற்றும் நாளையும் நாம் நினைவுகளில் தான் வாழ முடியும். இன்று மட்டுமே நிஜம். இன்றைய நாள் பொழுது நாம் சந்தோஷமாக கழிப்போம். அப்போதுதான் இனி வரும் நாட்களும் சந்தோஷமாக இருக்கும்.  எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு அடுத்தவரை பார்த்தால் வயிறு எரிகிறதா? | எண்ணம் போல் வாழ்வு

நம்மில் பலர் அடுத்தவர்களுக்கு இறைவன் பணம், பொருள், நிலம், நகை எல்லாம் கொடுத்துவிட்டார் என வயிறு எரிகின்றனர். ஆனால் இறைவன் நமக்கு என்ன கொடுத்தார் என்பதை காண தவறிவிடுகிறோம். யாரொருவர் தனக்கு கிடைத்ததற்கெல்லாம் இறைவனுக்கு நன்றி சொல்கிறார்களோ. அவர்களுக்கு தான் இந்த வாழ்க்கையில் அவர்களுடைய நியாயமான ஆசைகள் நிறைவேறுகின்றன. எண்ணம் போல் வாழ்வு.

உடல் மனம் லைத்துத் தான் காரியங்கள் செய்கிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

நாம் எந்த ஒரு நேரத்திலும் ஒரே ஒரு இடத்தில்தான் இருக்க முடியும். ஒரு வேளை நாம் பள்ளியில் பாடம் படிக்கிறோம் என வைத்துக் கொள்வோம். அப்போது ஆசிரியர் பாடம் நடத்துகிறார், ஆனால் நாம் நினைவால் வெளியே இருந்தோமென்றால். நமக்குத் தான் நஷ்டம் ஏனென்றால் நாம் ஆசிரியர் கூறியதை கேட்கவே இல்லை.  எந்த ஒரு செயலும் வெற்றி பெற வேண்டுமென்றால் நம் உடலும் மனமும் லயித்து வேலை செய்ய வேண்டும். அப்போதுதான் வெற்றி கிடைக்கும்.  எண்ணம் போல் வாழ்வு.

சந்தோஷம் என்பது எது? | எண்ணம் போல் வாழ்வு | #shorts #tamil #thoughts #எண்ணங்கள்

சந்தோஷம் என்பது நாம் தேடும் பொருட்களை எல்லாம் கிடைத்த பிறகு வருவது அல்ல. சந்தோஷம் என்பது நம்மிடம் இருக்கும் பொருளில் திருப்தி அடைவது. Where there is expectation there is loss. எங்கே எதிர்பார்ப்பு இருக்கிறதோ அங்கே தோல்வியும் இருக்கிறது. யார் இருப்பதற்கு நன்றி சொல்கிறார்களோ அவர்களுக்கு நிறைய கிடைக்கிறது. எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் சாமர்த்தியசாலி தானே? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு கணவர் தன் மனைவியிடம் நீ என் சிறந்த பார்ட்னர் இல்லை உனக்கு போதுமான சாமர்த்தியம் போதவில்லை என்று கூறுகிறார். அதற்கு அவர் மனைவி ஒரு சாமர்த்தியமான பெண் உங்களை திருமணம் செய்து கொள்வாலா என கேட்டார்? அதற்கு கணவர் உனக்கு ‌ சாமர்த்தியம்த் இல்லை என்பதை நீயே ஒத்துக் கொள்ளத்தான் கூறினேன் என கூறுகிறார். இப்படி குடும்பத்தில் சண்டை போட்டுக் கொண்டே இருந்தால் குடும்பம் இரண்டாக பிரிந்து விடும். தாம்பத்திய வாழ்க்கையில் கணவனும் மனைவியும் விட்டுக் கொடுத்து வாழ்வதே சிறப்பாக இருக்கும். யார் விட்டுக் கொடுப்பது. யார் சாமர்த்தியசாலியோ அவர் தான். எண்ணம் போல் வாழ்வு.

நம் வாழ்க்கைக்கு யார் பொறுப்பு? | எண்ணம் போல் வாழ்வு

நாம் பேருந்திலோ, ரயிலிலோ, விமானத்திலோ யாத்திரை செய்யும்போது நமக்கு தூக்கம் வரும்போது தூங்குகிறோம் ஏனென்றால் அந்த வாகனத்தை செலுத்துபவர் சிறப்பாக செலுத்துவார் என்ற நம்பிக்கையில். அதே போல நம் வாழ்க்கை என்னும் பயணத்தில் இறைவன் நம் வாழ்க்கையை சிறப்பாக எடுத்துச் செல்வார் என்ற நம்பிக்கையில் படுத்து தூங்கவேண்டும். நாளை என்ன நடக்குமோ என்ற சிந்தனை வரக்கூடாது. அதற்கு நாம் எண்ணம் சொல் செயல் மூலம் யாருக்கும் துக்கம் கொடுக்காமல் இருந்தால் போதுமானது. ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி | எண்ணம் போல் வாழ்வு

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி என்று சோக கீதம் பாடிக்கிட்டு  இருக்கீங்களா? ஒரு விமானம் வானத்தில் பறக்கணும்ன்னா அது எதிர்காத்த மீறி பறக்க வேண்டும். அதுபோல வாழ்க்கையில சோதனைகளை கடந்தா தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

மணமகள் மணமகனின் இடதா வலதா உட்காரவேண்டும்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் ஒரு முதியவரிடம் திருமண நிகழ்வில் மணமகள் மணமகனின் இடதா வலதா உட்கார வேண்டும் என கேட்டார். அதற்கு அந்த முதியவர் திருமண வாழ்க்கையில் மணமகள் மணமகனின் தலையில் உட்காரக்கூடாது அதற்கு பதிலாக அவனது மனதில் அமர வேண்டும். அதற்கு இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் இதுவே பிரதானம் என்று கூறினார். எண்ணம் போல் வாழ்வு.

உங்களை உலகமே எதிர்க்கிறதா? | எண்ணம் போல் வாழ்வு

உங்களை முழு உலகமுமே எதிர்க்கிறது அப்போது திரும்பி நின்று உங்கள் கைப்பேசியை எடுத்து ஒரு செல்பி எடுங்கள். அப்போது முழு உலகம் உங்கள் பின்னால் இருக்கும். நாம் என்ன சொல்கிறோம் என்றால் நம்முடைய Attitude அவ்வளவு உயர்ந்ததாக இருக்கவேண்டும். அதாவது நாம் கடின உழைப்பு செய்ய வேண்டும். இன்றைய எதிர்ப்பாளர்கள்  நாளைய நம் followers ஆக மாறும் வரை. எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்ற தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

நாம் நம் இளமைப் பருவத்தில் டிவியில் கார்ட்டூன் பார்க்க விரும்பி இருப்போம் ஆனால் செய்திகளை பார்த்திருப்போம் அதற்கு காரணம் tv யின் remote அப்பாவிடம் இருக்கும். இப்போது நாம் tv யில் செய்திகளை பார்க்க விரும்பினாலும் கார்ட்டூன் பார்ப்போம் ஏனென்றால் டிவி யின் ரிமோட் குழந்தையிடம் இருக்கும். வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும். நாம் எல்லா சூழ்நிலைகளையும் நம்மை சந்தோஷமாக வைக்க நாம் தான் முயற்சி செய்ய வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

வாழ்க்கையின் Speed Breaker எது? | எண்ணம் போல் வாழ்வு

நம் வாழ்க்கையில் வரும் சிறுசிறு துன்பங்களை கண்டு நாம் மனம் துவண்டு போக கூடாது. ரோட்டில் ஸ்பீட் பிரேக்கர் இருப்பது பெரிய பெரிய விபத்துகளை தடுப்பதற்கே. அதே போன்று நம் வாழ்வில் வரும் பெரிய பிரச்சினைகளை தவிர்க்க இந்த சின்ன சின்ன தடங்கல்கள் வந்து போகின்றன என புரிந்து கொண்டால் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் இரையை தேடுகிறீர்களா? அல்லது இறையை தேடுகிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு சராசரி மனிதன் ஒரு நாள் தேவைக்காக மூன்று வேளை இரையை தேடுகிறான் அதாவது உணவை தேடுகிறான். விவரம் தெரிந்த மனிதன் இறையை அதாவது இறைவனை தேடுகிறான். யார் உணவை தேடுகிறார்களோ  அவர்கள் பிறப்பு இறப்பு, பிறப்பு இறப்பு சுழற்சியில் வரவேண்டும். யார் இறைவனை தேடுகிறார்களோ அவர்கள் இறப்பு பிறப்பு சுழற்சியில் இருந்து தப்பிக்கலாம். எண்ணம் போல் வாழ்வு.